20 முடிக்கக் கூடாத கவிதை


எங்கிருந்து வந்தது
இந்த
வேதனை

முதலில்
இது
வேதனைதானா
அல்லது சுகமா

இல்லை
இது ஒரு
சுகமான வேதனை

நீ
என் நெஞ்சத்தில்
நடக்கிறாய் என்பதற்காகநான் மூச்சுவிடாமல்
தம்
கட்டிக்கொண்டிருக்கிறேனே
இதுவும் ஒரு
சுகமான வேதனைதானே

O

உன்
பெயரை உச்சரிக்கும்போதே
என் ரோமங்கள்
சிலிர்த்துக் கொள்கின்றனவே
உன்னையே உச்சரித்தால்

உன்
விழிச்சுடரைத் தொடும்போதே
சுற்றுப் புறங்கள்
இருண்டு விடுகின்றனவே
உன்னையே தொட்டால்

நீ என்
நெஞ்சவீணையில் வாசிக்கும்
ராகத்திற்குப் பெயர்தான்
காதலா

உன்னிடம் அப்படி
எதைக் கண்டுவிட்டு
இப்படி நான்
என்னை மறந்திருக்கிறேன்

உன்னிடம்
வெளிச்சம் போட்டுக் கிடக்கும்
அந்த அழகா

தூசு
தொடமுடியாத
அந்த உள்ளமா

ஏன்
என் நினைவுகளை இப்படி
மொத்தமாய் எடுத்துக்கொண்டாய்

O

அன்பே
எனக்குள் நீ எழுதுவது
தேவ கவிதைதானே

எழுது எழுது

ஆனால்
எல்லா கவிதைகளையும் போல
இதற்கும் ஒரு
முற்றுப்புள்ளி வேண்டும்
என்றுமட்டும் எண்ணிவிடாதே.

No comments: