43 குடியரசு


இந்தியப் பொய்கையில்
அரசியல் எருமைகள்
நீராடுகின்றன
உரசிக்கொள்கின்றன
முட்டிக்கொள்கின்றன
வீழ்கின்றன எழுகின்றன
இடம்மாறுகின்றன
பாவம்
மக்கள் மீன்களோ
சகதியைச் சுவாசிக்கின்றன

2 comments:

Anonymous said...

இந்திய நாட்டில் மட்டுமல்ல - எந்த நாட்டிலும் இதுதான் இன்றைய நிலை.

அன்புடன் ..... சீனா

Unknown said...

உண்மைதான் சீனா, மன்னராட்சியில் ஒரே ஒரு திருடன், மக்களாட்சியில் எல்லோருமே திருடர்கள்.

சில விதிவிலக்குகள் உண்டுதான் பாவம், அவர்களை மட்டும் மன்னித்துவிடுவோம் :)