77

இழுந்து அணைத்து
கழுத்த்த்த்துக்குள்
புதைந்தால்

இமைக் கதவுகளைச் சாத்திக்கொண்டு
விழிச் சொர்க்கங்களுக்கு
விடுமுறை கொடுத்துவிடுவாள்
என் யாழிசை

இதழ்கள் கவ்வி
உயிர் உறிஞ்சினால்
இன்னுமின்னும் இறுக்கமாய்த்
தன் விழிச் சொர்க்கங்களைப் பூட்டிச்
சாவியைத் தூர எறிந்தேவிடுவாள்

இதற்குமேல் எழுதி
அவளைப் பாடாய்ப்படுத்த
நான் தயாராய் இல்லை.

காதல் தவிப்பே என்றாலும்
என் கண்மணி துடிப்பதை
என்னால் ஏற்க முடிவதில்லை

காதலிக்கிறேன் உன்னை எப்போதும்

1 comment:

shanthi said...

kudhuthu vaithaval ungal kanmani. Epodhum pol kaadhal kavidhai ezhudha ungalai minja aalilai