*****Top
72

இனி
ஒருபோதும்
கடற்கரைக்கு வராதே

எத்தனை பெரிய
கடல் அது

நீ
எழுந்துபோனபின்னும்
பேரலைகளாய்த்
தாவித் தாவித்
தவிக்கிறது பார்
பாவம்

காதலிக்கிறேன் உன்னை எப்போதும்

5 comments:

விழியன் said...

வேகமா போயிட்ட பின்பு தான் சுனாமி வந்ததோ ?? :)

கேசவன் said...

புகாரி உங்கள் கற்பனை திறனுக்கு சல்யூட் தான் !

சிவா said...

அருமை ஆசான்

புன்னகையரசன் said...

கற்பனை அலை கொடி கட்டி பறக்கிறது....
வாழ்துக்கள் ஆசான்

ஆயிஷா said...

அதன் ஏக்கம் அதற்கு. அவளுக்கெங்கே தெரியப் போகின்றது.
ஆயிஷா