நிகரற்று ஒளிதெறிப்பாய்



ஏதும் மீதமின்றி
எக்கதவும் திறப்பின்றி
யாவும் இழந்தே
இருட்சிறை வீழ்ந்தனையோ

மனமே....
நீ ஏதும் இழக்கவில்லை
எத்துயருளும் மூழ்கவில்லை

இழந்தது ஏதாகிலும்
எள்ளளவும் தேடா இதயம் பெறு

ஜென்ம விடுதலையின்
பூரணப் பொருள்
உன் உயிரில் பொரிக்கப்படும்

நெருப்பெனும் பூதமாவாய் நீ
நிகரற்று ஒளிதெறிப்பாய்

உனைத் தொடவும் அஞ்சும்
உலகுமேலேறி
என்றுமழியா பிரபஞ்சம் நிறைவாய்

3 comments:

சசிகலா said...

இதயம் இரும்புப் பெட்டி அல்லவே இழந்ததை நினையாமல் இருப்பதற்கு . வரிகள் அருமை .

திண்டுக்கல் தனபாலன் said...

நல்ல வரிகள் ! ரசித்தேன் ! நன்றி சார் !

திண்டுக்கல் தனபாலன் said...

நல்ல வரிகள் சார் !