23

கனாக்களின் பரவச வானில்
கற்பனைகளின் பொற் சிறகுகளில்
பறந்தேன் தொலைதூரம்
முத்தமிட்டேன்
நட்சத்திர ஒளிப் பூக்களை

நிலவை மிதித்தேறியவன்
உன் சொல்தடுக்கி வீழ்ந்தேன்
கெடு நோய் நொடிக்குள்

கருவும் நீ
கருச்சிதைவும் நீ

அமைதியிலா உன்னகம்
ஆட்டிப்படைக்க

என்னைப்
புறந்தள்ளவும்
உள்ளிழுக்கவுமாய்
வழுக்கித் திரிகிறாய்
வற்றாமல்

தூள் தூளாய் உடைத்தே
சிதறியழிகிறது
என் நடுமுள்

காதலிக்கிறேன் உன்னை எப்போதும்

No comments: