அறக் கண்ணாடியில்...

வஞ்சகர்களின்
தந்திரங்களில் ஏமாறும்போது
உங்களை நீங்களே
குறைவாக எண்ணிக்
குமையாதீர்கள்

அறக் கண்ணாடியில்
உங்கள்
அழகைப் பாருங்கள்
நீங்கள் நீங்களாக
நல்ல மனதோடு இருக்கிறீர்கள்

அதைப்
புலன்கள் ஐந்தும் குதூகலிக்கப்
பூதங்கள் ஐந்தோடும்
கூடிக் கொண்டாடுங்கள்

அப்போதுதான் உங்கள்
நல்ல மனம்
விரியத் தொடங்கும்
தந்திரக்காரர்களைத்
தடாலடியாய்த்
தோற்கடிப்பீர்கள்

இல்லையேல் உங்கள்
நல்ல மனம்
மெல்ல மெல்லச்
சுருங்கத் தொடங்கிவிடும்
நீங்களும் அந்த அற்ப அழுக்குப்
புழுக்களாகிவிடுவீர்கள்

No comments: