உன்னையே உயிரென்று
நான்
ஏற்றிவைத்த பின்
உன்னை
எப்படி அழைப்பதாய்க்
கற்பனை செய்தாலும்
புல்லரிக்கவே செய்கிறது

...பைத்தியம்
...பிசாசு
...உசுரு
...லட்டு
...ராட்சசி
...டைனசர்
...செல்லக்குட்டி
...சாத்தான்

நீ பைத்தியம் என்றால்தான்
என் நோய் வைத்தியம் பெறும்

நீ பிசாசு என்றால்தான்
என் உயிர் உனதாகிப்போகும்

நீ உயிர் என்றால்தான்
தமிழ் எனக்குக் கவிதைகள் தரும்

நீ லட்டு என்றால்தான்
என் எறும்புகளெனைக் கொல்லாதுவிடும்

நீ ராட்சசி என்றால்தான்
என் காதல் சாந்தம் பெறும்

நீ டைனசர் என்றால்தான்
என்னைத் தேடித்தேடிக் கடிப்பாய்

நீ செல்லக்குட்டி என்றால்தான்
என் மடிவிட்டு இறங்கவே மாட்டாய்

நீ சாத்தான் என்றால்தான்
நான் உன் ஆப்பிள் உண்ணுவேன்

காதலிக்கிறேன் உன்னை எப்போதும்

No comments: