இந்துக்கள் எல்லோரும்
தீவிரவாதிகள் என்றால்
இந்தியா என்றோ
அழிந்துபோயிருக்கும்

கிருத்தவர்கள் எல்லோரும்
தீவிரவாதிகள் என்றால்
யூதம் என்றோ
தீய்ந்துபோயிருக்கும்

முஸ்லிம்கள் எல்லோரும்
தீவிரவாதிகள் என்றால்
உலகம் என்றோ
முடிந்துபோயிருக்கும்

தீவிரவாதம்
லாபநோக்குடைய வியாபாரம்

வல்லரசுகள்
நல்ல வியாபாரிகள்

தீவிரவாதத்தை உருவாக்கிச்
சந்தைக்குக் கொண்டுவராவிட்டால்
வல்லரசுகளின் பிழைப்பு
நாறிப்போகும்

தீவிரவாதத்தை
வல்லரசுகள் விரும்புவதைப் போல
உலக மக்கள் யாவரும்
விரும்பிவிட்டால்
ஜீவராசிகளே மண்ணில் இல்லாதொழியும்

தீவிரவாதம் வெறுக்கும்
மக்களைப் போற்றுவோம்

தீவிரவாதம் உருவாக்கும்
நச்சு வல்லரசுகளைத் தூற்றுவோம்

2 comments:

Yaathoramani.blogspot.com said...

தீவிர வாதத்திற்கு உடன்படுவோரையும்...

mohamedali jinnah said...

அருமையான வரிகள்
முஸ்லிம்கள் எல்லோரும் தீவிரவாதிகள் என்றால் உலகம் என்றோ முடிந்துபோயிருக்கும்

தீவிரவாதம் லாபநோக்குடைய வியாபாரம்
வல்லரசுகள் நல்ல வியாபாரிகள்

தீவிரவாதத்தை உருவாக்கிச் சந்தைக்குக் கொண்டுவராவிட்டால் வல்லரசுகளின் பிழைப்பு நாறிப்போகும்