எங்கிருந்து வந்தாய்

உன் வேர்களில்
எப்படி வந்தது என் வாசம்

உன் வாசத்தில்
எப்படி பூக்கிறது என் காலம்

இன்றோடு எனக்கொரு
புது ஜென்மமா

நீயா...
நீயேதானா
அதைத் தரவந்த தேவதை

உன்னை
அணைக்கத் துடிக்கிறேன்
ஆனால் மாட்டேன்

உன்னை
முத்தமிட ஏங்குகிறேன்
ஆனால் மாட்டேன்

உன்னுள்
மூழ்கிப்போக கொதிக்கிறேன்
ஆனால் மாட்டேன்

ஏன்

நீ சொல்
என்னைத் தெரிந்த
கர்வம் உனக்கிருந்தால்

காதலிக்கிறேன் உன்னை எப்போதும்

No comments: