ஒரு கிராமவாசியின் கேள்விகளும் நபிபெருமானாரின் பதில்களும்


ஒரு கிராமவாசியின் கேள்விகளும் நபிபெருமானாரின் பதில்களும்


*

நான் பணக்காரனாக என்ன செய்ய வேண்டும்?

நீங்கள் போதுமென்ற தன்மையை பெற்றுக் கொள்ளுங்கள். பணக்காரராகிவிடுவீர்கள்.






*


நான் கண்ணியமுடையவனாக வாழ வழி என்ன?


ஜனங்களிடம் கையேந்துவதை விட்டும் தவிர்த்துக் கொள்ளுங்கள்






*


நான் ஒரு நல்ல மனிதராக ஆக விரும்புகிறேன்.


ஜனங்களுக்கு உங்களை கொண்டு பிரயோஜனம் ஏற்படட்டும். நல்ல மனிதராக ஆகி விடுவீர்கள்.






*


நான் நீதியுள்ளவனாக விரும்புகிறேன்?


நீங்கள் எதை விரும்புகிறீர்களோ, அதை மற்றவருக்கும் விரும்புங்கள்






*


நான் சக்தியுடையவனாக ஆக என்ன வழி?


இறைவனின் மீது நம்பிக்கையை ஏற்படுத்துங்கள்






*


இறைவனின் தர்பாரில் விசேட அந்தஸ்து கிடைக்க விரும்புகிறேன்?


அதிகமாக தியானம் செய்யுங்கள்






*


வேண்டுதல் அங்கீகரிக்கப்பட என்ன வழி?


ஹராமான பொருளாதாரத்தை உண்பதை விட்டும் தவிர்த்துக் கொள்ளுங்கள்.






*


முழுமையான நம்பிக்கையுடையவராக என்ன வழி?


நற்குணமுடையவராக ஆகி விடுங்கள்






*


பாவங்கள் குறைய வழி என்ன?


அதிகமாக இறைவனிடம் பாவ மன்னிப்பு தேடுங்கள்






*


இறைவனின் தீர்ப்பு நாளில் எனக்கு பிரகாசம் ஏற்பட வழி என்ன?


அநீதம் செய்வதை விட்டு விடுங்கள். பிரகாசம் கிடைக்கும்






*


இறைவன் என் குறைகளை மறைக்க வழி என்ன?


பிறருடைய குறைகளை இவ்வுலகில் மறைத்து விடுங்கள்






*


உலகத்தில் இழிவடைவதை விட்டும் பாதுகாப்பு எதில் உள்ளது?


விபச்சாரம் செய்வதை விட்டும் தவிர்ந்து கொள்ளுங்கள். இழிவடையாமல் பாதுகாக்கப்படுவீர்






*


இறைவனுடைய இறைத்தூதருடைய பிரியனாக வழி என்ன ?


இறைவனும் இறைத்தூதரும் பிரியப்படக்கூடியவர்களை பிரியபடுங்கள்






*


நான் இறைத் தொடர்புடையவனாக ஆக வழி என்ன?


இறைவனை நீங்கள் காண்பதாக என்ணியும் இறைவன் உங்களைக் காண்பதாக எண்ணியும் தொழுங்கள்






*


பாவத்தை விட்டும் மன்னிப்பளிக்கக்கூடியன எவை?


கண்ணீர், பலவீனம், நோய்






*


நரகத்தின் நெருப்பை குளிர வைக்கக் கூடியது எது?


இவ்வுலகில் ஏற்படும் இன்னல்களின் மீது பொறுமையாக இருப்பது






*


இறைவனுடைய கோபத்தை எது குளிர வைக்கும்?


மறைவான நிலையில் தர்மம் செய்வது – சொந்த பந்தங்களை ஆதரிப்பது






*


எல்லாவற்றிலும் மிகப்பெரிய தீமை எது?


கெட்ட குணம் – கஞ்சத்தனம்






*


எல்லாவற்றிலும் மிகப்பெரிய நன்மை எது?


நற்குணம் – பொறுமை – பணிவு






*


இறைவனுடைய கோபத்தை விட்டும் தவிர்த்துக் கொள்ள வழி என்ன? மனிதர்களிடம் கோபப்படுவதை விட்டு விடுங்கள்

No comments: