20160812

Mohamed Raja
>>>>>>>>>>>>>>>
வணக்கம் என்ற சொல் பண்டைய தமிழ் மரபில் ஒருவரை வாழ்த்துவதற்காகப் பயன்படுத்த வில்லை யென்றே கருதுகிறேன்.
இந்த வணக்கத்தை மேல்மட்டத்தினர்களிடம், சாமியார்கள், சங்கராச்சாரியார்களிடம் நீங்கள் கூறினால் அதே பதில் உங்களுக்குத் திருப்பிக் கிடைக்குமா..?
நாம் அந்தச் சொல்லை எப்படிப் பார்க்கிறோம்..!
வணக்கமும், வழிபாடும் இறைவனுக்கு மட்டுமே என்று நம்புகிறோம்.
நான் உனக்கு முழுவதுமாகப் கட்டுப்படுகிறேன் என்பது பொருள்.
இறைவனை -கடவுளை வணங்குவதற்குப் பயன் படுத்தும் இந்த வார்த்தையை தவறுகள் செய்யக்கூடிய மனிதனுக்குப் பயன்படுத்தலாமா...?
<<<<<<<<<<<
ஆங்கிலத்தில் இதற்கு ஓர் அழகான உதாரணம் இருக்கிறது. ஏன் இதற்கு ஆங்கிலத்தை நாடுகிறேன் என்றால் அது ஆங்கிலமாக அல்லாமல் தமிழாகி இன்னும் பிறமொழிகளாகி சில நூற்றாண்டுகளே ஆகிவிட்டன 
ஐ லவ் யூ!
நான் என் தாயைப் பார்த்து ஐ லவ் யூ அம்மா என்கிறேன்
என் காதலியைப் பார்த்து ஐ லவ் யூ டா என்கிறேன்
என் மனைவியைப் பார்த்து ஐ லவ் யூ பொன்ஸ் என்கிறேன்
என் மகளைப் பார்த்து ஐ லவ்யூ செல்லம் என்கிறேன்
என் வீட்டுப் பூனையைப் பார்த்து ஐ லவ் யூ குட்டி என்கிறேன்
பக்கத்து வீட்டுப் பொடியனைப் பார்த்து ஐ லவ் யூ நாட்டி என்கிறேன்
கண்ணாடியில் என் முகத்தைப் பார்த்து ஐ லவ் யூ இடியட் என்று சொல்கிறேன்
இது எல்லாவற்றுக்குமே பொருள் ஒன்றுதானா?

*
கடவுள் இருக்கிறார் என்பவனை விட்டுவிடுங்கள்
கடவுள் இல்லை என்பவனையும் விட்டுவிடுங்கள்
நான் தான் கடவுள் என்பவனை உறித்து ஊறுகாய்ப் போட்டுவிடுங்கள் 
*

உன் ஜீவன்
உன்னை மீண்டும் தேடி வந்தால்
அந்த ஜீவன்
ஏன் வந்தது என்று
அந்த ஜீவனே 
செப்பும்வரைக் காத்திரு
உன்
நெஞ்சப் பெருக்கையும்
நெகிழ்ச்சி ஊற்றையும்
குவித்துக் கொண்டாடி
குத்தாட்டம் போட்டுவிடாதே
உனக்குத் தெரியாது
உன் ஜீவன்
என்று நீ நினைப்பது
உண்மையில்
உன் ஜீவனே அல்ல என்பது

*
தமிழன் அதீத உணர்வுகளால் ஆக்கப்பட்டவன்.
அதுவே அவனுக்கான சாபமாய் ஆனதுதான் பெருங் கொடுமை.
தலைவன் தலைவன் என்று கண்ட கண்ட நாய்களையும் உச்சத்தில் ஏற்றி எந்தக் கேட்டுக்கேள்வியும் இல்லாமல் அவன் சகதிப் பாதத்தை உதடுகளால் கழுவி முத்தமிட்டு கடைசிவரை தலைவனுக்கான எந்த எதிர்மறை ஆய்வையும் ஏற்காமல் விசுவாசமாகவே இருந்து மடிந்துபோவான்.
தலைவனோ இவன் பொண்டாட்டியைக் கூட விட்டுவைக்கமாட்டான்.
இது இந்தியத் தமிழன், இலங்கைத் தமிழன் மலேசியத் தமிழன் என்ற எந்த பாகுபாடுமின்றி நிகழ்ந்தேறும் கொடுங் கேடு.

*
அண்ணல் நபிகளாரின் 60 பொன் மொழிகள் !!!
1. செயல்கள் அனைத்தும் எண்ணங்களை பொறுத்தே அமைகின்றன.
2. இறைவன் உங்கள் உருவங்களையோ, உங்கள் செல்வங்களையோ பார்ப்பதில்லை. மாறாக உங்கள் உள்ளங்களையும், செயல்களையும் பார்க்கின்றான்.
3.அமானிதத்தை ( அடைக்கலப் பொருளை) பேணிக் காக்காதவனிடம் ஈமான் இல்லை (நம்பிக்கை இல்லை) வாக்குறுதியை நிறைவேற்றாதவரிடம் தீன் (இறைநெறி) இல்லை.
4. உங்கள் வீடுகளில் இறைவனுக்கு மிக விருப்பமானது அனாதைகளை அரவணைக்கும் வீடேயாகும்.
5. நிதானம் என்பது இறைவனின் தன்மையாகும். அவசரம் ஷெய்த்தானின் தன்மையாகும்.
6. உங்களில் நற்குணம் உடையவரே உங்களில் சிறந்தவர் ஆவார்.
7. எளிமையாக வாழ்வது இறை நம்பிக்கையின் பாற்பட்டதாகும்.
8. எந்த மனிதனுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்து, அவன் அதை அறியாமைக்கால வழக்கப்படி உயிரோடு புதைக்கவில்லையோ, அதனை இழிவாக கருதவில்லையோ, அதைக்காட்டிலும் ஆண் குழந்தைகளுக்கு முன் உரிமை வழங்கவில்லையோ அத்தகையவனை இறைவன் சுவனத்தில் புகுத்துவான்.
9. இலஞ்சம் வாங்குபவர் மீதும், இலஞ்சம் கொடுப்பவர் மீதும் இறைவனின் சாபம் உண்டாகட்டும்.
10. கூலியாளின் வியர்வை உலருவதற்கு முன் அவருடைய கூலியை கொடுத்துவிடுங்கள்.
11. பதுக்கல் செய்பவன் பாவியாவான்.
12. தாயின் காலடியில் சுவர்க்கம் இருக்கிறது.
13. பெண்களிடம் நல்ல முறையில் நடந்து கொள்ளுங்கள்.
14. தந்தை தன் மக்களுக்கு அளிக்கும் அன்பளிப்புகளில் மிகச் சிறந்தது அவர்களுக்கு
அளித்திடும் நல்ல கல்வியும், நல்லோக்கப் பயிற்சியும் ஆகும்.
15. அனைத்தையும் விடச் சிறந்த சேமிப்பு பொருள்கள் இறைவனை நினைவு கூரும் நாவு, இறைவனுக்கு நன்றி செலுத்தும் உணர்வால் நிரம்பிய உள்ளம், இறைவழியில் நடந்திட தன் கணவனுக்கு உதவிடும் இறை நம்பிக்கையுள்ள நல்ல மனைவி ஆகியனவே.
16. நான் உங்களுக்கு மிகச்சிறந்த தர்மம் ஒன்றை கூறட்டுமா? அது, தனக்கு பொருளீட்டி உணவளிக்க வேறு யாருமில்லை என்ற நிலையில் உன் பக்கம் திருப்பி அனுப்பப்பட்ட உன் மகள் தான்.
17. அநாதையின் தலையை இரக்கத்துடன் தடவுங்கள்.
18. ஏழை எளியவர்களுக்கு உணவளியுங்கள்.
19. இறைவனின் மீதும் மறுமை நாளின் மீதும் நம்பிக்கை கொண்டவர்கள் தம் விருந்தாளிகளை உபசரிக்கட்டும்.
20. தன் பக்கத்தில் இருக்கும் அண்டை வீட்டார் பசித்திருக்க தான் மட்டும் வயிறார உண்பவர் ஓர் இறைநம்பிக்கையாளராய் இருக்க முடியாது.
21. பசித்தவன் ஒருவனுக்கு வயிறு நிறைய நீ உணவளிப்பது மிகச்சிறந்த தர்மமாகும்.
22. தன் அடிமைகளின் மீதும் பணியாட்களின் மீதும் தன் அதிகாரத்தை தவறாக பிரயோகித்தவன் சுவனத்தில் நுழைய மாட்டான்.
23. நோயாளிகளை நலம் விசாரியுங்கள்.
24. உங்களில் ஒவ்வொருவரும் தன் சகோதரனின் கண்ணாடியாவார். எனவே, ஒருவர் தன் சகோதரன் துன்பத்தில் சிக்கி இருப்பதை கண்டால் அதனை அவர் நீக்கி விடட்டும்.
25. உனது தந்தையின் அன்பை நீ பாத்துக்காத்து கொள். அதை முறித்து விடாதே அவ்வாறு அதை முறித்து கொண்டால் இறைவன் உனது ஒளியை போக்கி விடுவான்.
26. இறைவனின் உதவி என்னும் கை ஒன்றுப்பட்ட மக்களின் மீதிருக்கிறது.
27. உங்களில் இறந்தவர்களின் நற்செயல் பற்றியே கூறுங்கள்.
28. இறைவனை அஞ்சுங்கள். உங்கள் மக்களிடையே நீதமாக நடந்து கொள்ளுங்கள்.
29. பெருமை அடிப்பவன் சுவனத்தில் நுழைய மாட்டான்.
30. நீங்கள் விரும்புவதை உண்ணுங்கள். விரும்புவதை அணியுங்கள். ஆனால் ஒரு நிபந்தனை, உங்களிடம் கர்வமும், வீண்விரயமும் இருக்கக் கூடாது.
31. இறுதி தீர்ப்பு நாள், கொடுமைக்காரனுக்கு இருள் மிக்கதாக இருக்கும்.
32. குத்துச்சண்டையில் அடுத்தவனை வீழ்த்துபவன் வீரன் அல்ல. மாறாக, கோபம் வரும் போது தன்னைத்தானே அடக்கி கொள்பவனே வீரன் ஆவான்.
33. எவரையும் பழித்து காட்டுவதை நான் விரும்பவில்லை.
34. புறம் பேசுவது விபச்சாரத்தை விட கடுமையான பாவமாகும்.
35. கோள் சொல்பவன் சுவனம் நுழைய மாட்டான்.
36. நெருப்பு விறகைச் சாம்பலாக்கி விடுவதைப் போல் பொறாமை நற்செயல்களை சாம்பலாக்கி விடும்.
37. தன் நாவையும், வெட்கத்தலத்தையும் ஒருவர் பாதுகாத்து கொள்வதாக பொறுப்பேற்றால் அவருக்கு சுவனம் கிடைத்திட நான் பொறுப்பேற்றுக் கொள்கிறேன்
38. நாவை அடக்கு. உன்னால் தீய உணர்வுகளை அடக்க முடியும்.
39. தீமைக்கு பின் அதை அழிக்கவல்ல நன்மையை செய்யுங்கள்.
40. மௌனம் சாதிப்பது அறிவு நிறைந்த செயல்.
41. இனிமையான பேச்சும் ஒரு விதத்தில் தர்மம் தான்.
42. நாணம் நன்மையை மட்டுமே கொணர்கின்றது.
43. ஒரு வினாடி நேர சிந்தனை, ஓராண்டு கால இறை வணக்கத்தை விடச் சிறந்தது.
44. உம்முடைய உறவை துண்டித்து வாழ்பவனுடன் நீ சேர்ந்து வாழு. உமக்கு அநீதம் இழைத்தவனை மன்னித்து விடும்.
45. நற்குணம் என்பது நம்பிக்கைக்குரிய அடையாளமாகும். தீயகுணம் என்பது நயவஞ்சகத்தின் அடையாளமாகும்.
46. உண்மையான வியாபாரி நபிமார்கள், தியாகிகள், நல்லடியார்கள் முதலியோர்களுடன் சுவனத்தில் இருப்பார்.
47. வணக்க வழிப்பாடு உள்ள ஒரு உலோபியை விட வணக்க வழிப்பாடு குறைந்த ஒரு கொடையாளி இறைவனுக்கு மிக சிறந்தவன்.
48. தர்மத்தில் சிறந்தது இடது கைக்கு தெரியாமல் வலது கையால் கொடுப்பது தான்.
49. இரசியமாக செய்யும் தர்மம்தான் இறைவனின் கோபத்தை தடுக்கும்.
50. ஒரு மனிதன் பெற்றோரை ஏசுதல் பெரும் பாவமாகும்.
51. தன் பெற்றோரை நிந்திப்பவன் தன் மக்களால் நிந்திக்கப்படுவான்.
52. கல்வி கற்பதானது ஒவ்வொரு ஆண், பெண் மீது கடமையாகும்.
53. பிள்ளைகள் பேரில் உபகாரமாயிருக்கும் தாய் தந்தையருக்கு இறைவன் அருள் செய்கிறான்.
54. ஏழைகளின் கண்ணீர் கூரிய வாளுக்கு கொப்பாகும்
55. வணக்கங்களில் மிக இலகுவானதை நான் உங்களுக்கு தெரிவிப்பதானால் அது மௌனம் காக்கும் நாவும், மங்களமான நற்குணமும்தான்.
56. மிதமிஞ்சிய உணவு அறிவை கெடுத்து, ஆரோக்கியத்தை குறைக்கும்.
57. செல்வவளம் என்பது அதிகமாக செல்வத்தை பெறுவதல்ல. போதுமென்ற மனதை பெறுவதே உண்மையான செல்வமாகும்.
58. இறைவன் யாருக்கு நலவை நாடுகிறானோ அவனுக்கு மார்க்கத்தில் விளக்கத்தை அளிப்பான்.
59. நம் சிறுவர்களிடம் மரியாதை காட்டாதவனும், பெரியோர்களுக்கு மரியாதை செய்யாதவனும் நம்மை சார்ந்தவனல்ல.
60. உன் சகோதரனின் துன்பத்தை கண்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தாதே. இறைவன் அவன் மீது கருணை புரிந்து உன்னை துன்பத்தில் ஆழ்த்திடுவான்

*
கடவுள் நீக்கமற எங்கும் நிறைந்திருக்கிறார் அவர் உங்களிலும் நிறைந்திருக்கிறார் என்பது வேறு நான் தான் கடவுள் என்பது வேறு.
ஏதாவது புரிகிறதா?

*

அறமிலா மனிதன் 
பாழ்பன்றிக்குடற்புழு
*
நிறுவனங்களும்
நிராயுதபாணிகளும்
மொத்தமாய் விழுங்குவதைச்
சுத்தமாய் அறியாமல்
வாழ்க்கையை விற்று
வேண்டாத வசதிகள்
சமூகக் கௌரவங்களாய்
வெட்டிச் செலவுப் பழக்கத்தை உருவாக்கி
தொடர் கடனாளிகளாய் ஆக்கி
பொருள் குவிக்கும் சக்திகள்
உலகை மயாண வெளிகளாக்கும்
நாசங்கள் மோசங்கள் துவேசங்கள்
அறமற்ற நிறுவனங்கள்

*
சாதியப் பாகுபாடுகளில்
இந்த நூற்றாண்டிலும்
நெளியும் ஒருவனை
எங்கு கண்டாலும்

மெய்யாக
உண்மையாக
நிச்சயமாக
சத்தியமாக
நீ
மனித சாதியே
இல்லை
கொடு நஞ்சே
என்று
கறுத்துச் சிறுத்த
அவன் முகத்தில்
காரிக் காரி உமிழ்வோம்
மனிதம் வளர்ப்போம்
*
>>>மக்கள் எவரும் நான்தான் கடவுள் என்பவரை ஒருபோதும் நம்புவதில்லை
மாறாக நான் தான் கடவுளின் நெருங்கிய சேவகன் எனும் போது அவரை மலைபோல நம்பத் துவங்குகிறார்கள் ஏமாறுகிறார்கள்>>>>
அவனையும் நம்புகிறார்கள் இவனையும் நம்புகிறார்கள். நம்பாமலா அவன்கள் இத்தனை ஆட்டம் போடுகிறான்கள்?
அதனால்தான் மார்க்கம் தெளிவாகச் சொல்கிறது, இறைவனுக்கும் உனக்கும் இடையில் எவனும் இல்லை என்று.

*

இறைவனுக்கும் 
உனக்கும் இடையில் 
எவனும் இல்லை

*
அறிவாளிகள் உயர்ந்தவர்கள் என்றில்லை
ஏனெனில் அறிவு இருவகைப்படும்
ஒன்று அறம்போற்றிச் செயல்படும் நல்ல அறிவு
மற்றது அழுக்குநோக்கிச் செயல்படும் கெட்ட அறிவு
எல்லாம் அறிவுதான்

*

இந்தியா
அது நம் 
சாதி 
மத 
இன 
மொழி
சகிப்பின்
வெற்றி

*
கொலைவெறி வியாபாரம்
இந்தியாவில் மருத்துவம்

*

மார்க்கங்கள் வேறு வேறு அடையாளங்களைத் தருவதில்லை. அறம்கொண்ட மனிதன் இவன் என்ற ஒற்றை அடையாளத்தைத்தான் தருகிறது!

*
பிறமொழிப் பெயர்ச்சொற்களைத் தமிழில் எழுத வசதி வேண்டும் என்று நான் தமிழ் எழுத்துக்களுக்குள் கோடுகளைக் கொண்டுவருவதைத் துளியும் ஏற்கவில்லை.
ஆனால் இருக்கும் ஆய்த எழுத்தையும் ஐந்து கிரந்த எழுத்தையும் பெயர்ச் சொற்களில் மட்டும் அதுவும் கட்டாயம் கருதி மட்டும் பயன்படுத்துவேன்.
இப்படியே எத்தனையோ தமிழ் எழுத்தாளர்களும் கவிஞர்களும் எழுதிச் செல்வதையும் கண்டிருக்கிறேன்.
தனித்தமிழ் போற்றும் பாரதிதாசனின் பெயரில் பாரதியும் தமிழில்லை தாசனும் தமிழில்லை. ஆனால் அவர் அதுபற்றிக் கவலையுற்றதாகத் தெரியவில்லை.
தமிழராய் இருப்போம் தமிழ் போற்றுவோம் அதேசமயம் வளையத் தெரியாத தமிழராய் ஆகவும் மட்டோம்

*
தெரியும், நிச்சயமாக நீங்கள் ஜிகாத்தை பிழையாகத்தான் புரிந்துகொண்டிருப்பீர்கள் என்று.
அது உங்கள் தவறு இல்லை.
உங்களுக்கு அது அப்படி மொழிபெயர்த்துச் சொல்லப்பட்டிருக்கிறது. யார் சொன்னார்கள் என்று அலசத் தேவையில்லை.
ஆனால் எது சரியோ அந்த வழியில் சென்று பார்ப்போமா?
ஒரு சொல்லுக்குப் பொருள் தெரிய வேண்டும் என்றால் நீங்கள் யாரைக்கேட்பீர்கள்?
நான் ஒரு நல்ல தரமான அகராதியை எடுத்துப் பார்ப்பேன். போதாதென்று இன்னும் சில அகராதிகளையும் பார்த்துத் தெளிவேன்.
என்றால் நீங்கள் ஜிகாத் என்பதன் பொருள் என்னவென்று அறிய என்ன செய்யவேண்டும்?
கள்ளுக்கடைக்குச் சென்று கற்பூரம் கேட்பது சரியா?

*
>>>கட்டுமரம் என்று சொல்லிக்கொள்ள ஆங்கிலேயன் மெனக்கெட வில்லை.
அவனுடைய ஒலிஉருவில் கட்டுமரான்
என்று சொல்லிக்கொண்ணடான்.<<<
ஒரு முட்டாப்பயலையா இதற்கு உதரணமாக எடுத்துக்கொள்ள வேண்டும்?
வெள்ளையன் சொன்னால் சரியாத்தான் இருக்கும் என்ற நம் அடைமைத்தனம் எப்போதுதான் ஒழியுமோ தெரியலயே பகவானே 
நான் தமிழன். என் தமிழ் இந்தத் தமிழ்த்தாக தமிழனுக்கு இனிப்பாய் இயல்பாய் சிறப்பாய் வளையும்.

*
உடையக் கூடாது, பண்போடு நாணலாய் வளைய வேண்டும்.
தமிழன் மூன்று விசயங்களில்தான் வளையவே கூடாது. அது
1. யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற கொள்கையில்

2. பேசுவது உயிர் பிரியும்போதும் தமிழ் என்பதில்
3. அறம் என்பதே வீரம் என்பதில்
*
விருந்தினர் வருகிறார் என்பதற்காக அவலங்களை மறைத்துத் திரைச் சீலைகள் இடுவது கள்ளத்தனம் அல்ல விருந்தோம்பல் என்ற உயர் செயல்.

*
மூடப்பய, தமிழ்நாடு வந்தான்
தஞ்சாவூரைத் டேஞ்சூர் என்றான்
மதுரையை மெஜ்ரா என்றான்
தூத்துக்குடியைத் டூட்டிக்கோரின் என்றான்
தூ என்று துப்புகிறேன் அதை நினைக்க்கும் போதெல்லாம்.
அப்படி ஒரு ஈனச் செயலை நான் எந்த மொழிக்காரருக்கும் செய்யவே மாட்டேன்.
என் அன்புத் தமிழ் மொழியை எவரின் பெயர்ச்சொற்களுக்காகவும் அழகாக வளைப்பேன்

*

>>>அடயாளங்கள் என்பதே இஸ்லாம் கிருத்துவம் சைவம் வைணவம் என்பதாக சொன்னேண்.<<<
அவை நூல்களைப் போன்றன. அவை தரும் அறிவுதான் அடையாளம் ஆகும்.
அவை தரும் அறிவு ஒன்றே ஒன்றுதான்.
அதன் பெயர் ***அறம்***

*
>>எனக்கு கிறிஸ்தவனும் இஸ்லாமியனும் மமுட்டாள்கள்தான்.<<<<
உங்களின் இந்த வெறி தனிந்து நீங்களும் மனிதநேயம் கொண்ட மனிதராய் மாறுவீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.
இப்போதைக்கு உங்கள் உள்ளே இருக்கும் கசடுகளை எல்லாம் கொட்டித் தீருங்கள்.
தீர்ந்து முடித்ததும் நல்வழிக்கு வந்துவிடுங்கள்.
வாழ்த்துக்கள்!

*
பிடிக்கவில்லை என்பதால்
வேண்டாம் என்று சொல்லவில்லை
பிடித்திருப்பதால்
வேண்டாம் என்று சொன்னேன்
காதலிக்கிறேன் உன்னை எப்போதும்

*
காபிர் என்றால் கெட்ட வார்த்தை இல்லை. கடவுள் மறுப்பாளர் அதாவது ஏதிஸ்ட் என்று பொருள்.
அல்லது Non-Muslim என்றும் சொல்லலாம்.
ஹராம் என்றால் அறமற்றது, கூடாதது, தடுக்கப்பட்டது, தகாதது என்று பொருள்.
இனி இந்த வார்த்தைகளை யார் எப்படிப் பயன்படுத்தினார்களோ அவர்களின் தரம் அதுதான்.
ஆனால் மொழியில் சொல்லில் மார்க்கத்தில் பிழையில்லை!

*
தமிழிக்குச் செய்யும் கேடுகளில் முதன்மையானதை விட்டுவிட்டு அவசியமில்லாததைக் கையில் எடுக்கிறீர்கள்.
தமிழுக்குக் கேடுகள்:
1. தமிழன் தமிழில் பேசாதது
2. தமிழன் தமிழ் எழுத வாசிக்கத் தெரியாதது
3. தமிழனின் வாழ்வாதாரம் அவன் மொழியில் இல்லாதது

*









No comments: