நேரடி உணர்வுகளின் கவிக்கோலம் - செப்டம்பர் 11, 2001 இரட்டைக் கோபுரம்
18 காதலியின் கடிதம்

என்னுயிர்க் காதலனே
காதல் என்ற
பரவசப் பட்டாம்பூச்சியை
இந்தப் பெண்மைக்குள்
பறக்க விட்ட
என்னழகுக் கள்வனே
துளையில்லா என் இதயத்துள்
ஊரறியாத் தருணத்தில்
தேர்பூட்டி நீ மெல்ல
ஊர்ந்ததுதான் எப்படி
என் நாவினில் சுரப்பில்லை
நடனமாடிய விழிகளில் அசைவில்லை
உன் முகம் மட்டுமே காட்டும்
கண்ணாடிச் சில்லானேன்
நீ உதிர்க்க உதிர்க்க
உயிர்ப்போடு சிறகடிக்கும்
உன் வண்ணத்து மொழிகள்
நீ சிரிக்கச் சிரிக்க
சிலிர்ப்புக்குள் சிக்கவைக்கும்
உன் கன்னத்துக் குழிகள்
நீ அசைய அசைய
அங்குமிங்குமாய்த் தெறிக்கும்
பொற் கவிதை வரிகள்
அப்பப்பா
நான் எப்படிச் சொல்ல
நீ என்னை
அகலும் இமைப்பொழுதோ
இந்தச் சின்னஞ்சிறு மெல்லிதயம்
அகதியாய் அலறிக்கொண்டு
உயிரின் வேர்களில்
ஓங்கி ஓங்கி இடிக்க
மொத்தமாய்த் தகர்கின்றன
எனக்குள் அத்தனையும்
ஓ
என் ஆருயிர்க் காதலனே
நீ என் உயிருக்குள்
உதடு வைத்து
ஒத்தி ஒத்தி எடுப்பதனால்தானோ
என்னைச் சுற்றி
புரியாத காற்றொலிகள்
ரிதம் மீட்டுகின்றன
அவை மல்லியைப்போல்
என் மனம்தொட்டு
மங்கா மணம்வீச நீ
எந்நாளும் என்னருகே
இருப்பாயா என்
காதலனே காதலனே காதலனே
என்று நான் உன்முன்
உருகி உருகி நின்றதெல்லாம்
சத்தியம் சத்தியம் சத்தியமே
ஆனால்
என் காதலனே
என் இதயத்தின்
ஒவ்வோர் அணுவையும்
ஆக்கிரமித்த உன்னையும்
உன் இதயத்தின்
ஒட்டுமொத்தத் துடிப்புகளுக்கும்
சொந்தக்காரியான என்னையும்
இன்று நானே
சிலுவையில் அறைந்துவிட்டேன்
காதல் என்ற தெய்வீகத்தையும்விட
இங்கே சமுதாயம் என்ற
சாத்தான் தானே வலிமையானவன்
அவன் சட்டங்களுக்குள்
சிக்கிக் கிடக்கும்
பிணக் குவியல்களில்
இன்று நானும் ஒருத்தி
முனகவும் அனுமதியில்லாத
இந்தப் பெண்மை
மௌனிப்பதையே துறவாய்ப் பூண்டது
இன்று எனக்குள்
பரிதவித்துத் துடிக்கும்
ஒவ்வோர் அணுவும் நீ
என்னை மறந்து எங்கேனும்
நிம்மதியாய் வாழமாட்டாயா என்றே
கணந்தவறாது தவித்துக்கொண்டிருக்கும்
நான் மண்ணுக்குள் புதைந்த பின்னும்
காதலிக்கிறேன் உன்னை எப்போதும்
YouTube ஒன்றல்ல சொர்க்கம் இரண்டு
அடடா... சொர்க்கம் ஒன்றுதான் என்று எவரேனும் சொன்னால் நம்பாதீர்கள் நண்பர்களே. எனக்குக் கிடைத்ததோ இரண்டு - அன்புடன் புகாரி கனடா
***** 17 தஞ்சாவூர்
என் மண்ணில் விழுந்ததும் நான் அழுதேன் அழுதேன். ஏன் அழுதேன்? என் ஊரில் என்னை இறக்கி விடாமல் இதுவரை ஏனம்மா உன் வயிற்றிலேயே பூட்டி வைத்திருந்தாய் என்ற கோபத்தில் இருக்கலாம். அப்படி என்னதான் இருக்கிறது என் ஊரில்?
வானூறி மழைபொழியும்
வயலூறிக் கதிர்வளையும்
தேனூறிப் பூவசையும்
தினம்பாடி வண்டாடும்
காலூறி அழகுநதி
கவிபாடிக் கரையேறும்
பாலூறி நிலம்கூட
பசியாறும் தஞ்சாவூர்
தேரோடித் தெருமிளிரும்
திருவோடி ஊரொளிரும்
மாரோடி உயர்பக்தி
மதமோடி உறவாடும்
வேரோடிக் கலைவளரும்
விரலோடித் தாளமிடும்
பாரோடிப் பொருள்வெல்லும்
பொன்னோடும் தஞ்சாவூர்
சேறோடி நெல்விளைத்து
ஊரோடி உணவளித்து
யாரோடி வந்தாலும்
கண்ணோடிக் கறிசமைத்து
நீரோடி வளர்வாழை
நிலமோடி இலைவிரிக்க
ஓடோடி விருந்தோம்பி
விண்ணோடும் தஞ்சாவூர்
வாய்மணக்கும் வெத்திலைக்கும்
வயல்மணக்கும் காவிரிக்கும்
காய்மணக்கும் தென்னைக்கும்
கைமணக்கும் பட்டுக்கும்
சேய்மணக்கும் சேலைக்கும்
சிகைமணக்கும் பெண்ணுக்கும்
தாய்மணக்கும் பண்புக்கும்
தரம்மணக்கும் தஞ்சாவூர்
தலையாட்டும் பொம்மைக்கும்
அலைகூட்டும் பாட்டுக்கும்
கலையூட்டும் கோவிலுக்கும்
சிலைகாட்டும் சோழனுக்கும்
மழைகூட்டும் மண்ணுக்கும்
பிழையோட்டும் தமிழுக்கும்
நிலைநாட்டும் புகழோடு
எழில்காட்டும் தஞ்சாவூர்
அன்புடன் புகாரி
கவிஞர் இந்திரனின் பார்வையில்
கவிஞர் இந்திரனின் சிறப்பு விமரிசனம் - சரணமென்றேன் காதல் கவிதை நூல் - கனடா கவிஞர் புகாரி
YouTube வேங்கூவர் கனடா
டொராண்டோவிலிருந்து முதன் முறையாக பணி நிமித்தம் நான் வேங்கூவர் சென்று,
அதன் அழகில் மயங்கி, அதன் பளிங்கு வீதிகளிலெல்லாம் இதயம் தள்ளாட இன்ப உலா வந்தேன். ஓர் ஐந்து தினங்கள் சுற்றித் திரிந்துவிட்டு, ஆசைக் காதலியைப் பிரியும் காதல் பித்தனைப்போல் விக்கலெடுக்கும் தொடர் ஏக்கத்தோடு எழில் வேங்கூவருக்கு விடைகொடுத்து நான் விமானத்தில் அமர்ந்தபோது படபடவென்று சிறகடித்துக்கொண்டு என் உள்ளத்தில் வந்து உட்கார்ந்த ஒரு வண்ணத்துக் கவிதைதான் இது.
கவிப்பேரரசு வைரமுத்து சிறப்புரை 3
சென்னையில் திசைகளின் கவிமுகத்தின் அறிமுகம் விழாவில் கவிப்பேரரசு வைரமுத்து கனடாவில் வாழும் கவிஞர் புகாரி அவர்களை அறிமுகம் செய்து சிறப்புரை ஆற்றுகிறார். தலைவர் மாலன். விமரிசகர்கள் கவிஞர்கள் இந்திரன் யுகபாரதி அண்ணாகண்ணன் வைகைச்செல்வி
கவிப்பேரரசு வைரமுத்து சிறப்புரை 2
சென்னையில் திசைகளின் கவிமுகத்தின் அறிமுகம் விழாவில் கவிப்பேரரசு வைரமுத்து கனடாவில் வாழும் கவிஞர் புகாரி அவர்களை அறிமுகம் செய்து சிறப்புரை ஆற்றுகிறார். தலைவர் மாலன். விமரிசகர்கள் கவிஞர்கள் இந்திரன் யுகபாரதி அண்ணாகண்ணன் வைகைச்செல்வி
கவிப்பேரரசு வைரமுத்து சிறப்புரை 1
சென்னையில் திசைகளின் கவிமுகத்தின் அறிமுகம் விழாவில் கவிப்பேரரசு வைரமுத்து கனடாவில் வாழும் கவிஞர் புகாரியை அறிமுகம் செய்து சிறப்புரை ஆற்றுகிறார். தலைவர் மாலன்.
*பொங்கல் வாழ்த்துக்கள்*
இன்று நான் கனடாவில் வாழ்கிறேன். ஆனால் நான் பிறந்ததும் விடலைப் பருவம் முடியும்வரை வளர்ந்ததும் தமிழ் நாட்டில்தான். கிராமங்களால் மட்டுமே சூழப்பட்ட இந்த ஒரத்தநாட்டுக்காரனின் ஒரு கவிதை. பசுமையாய் என் நெஞ்ச வெளிகளில் மிதந்துகொண்டிருக்கும் தை மாதக் கதை.
மஞ்சள் கொத்தோடு
மாமரத்து இலையோடு
இஞ்சித் தண்டோடு
எறும்பூரும் கரும்போடு
வட்டப் புதுப்பானை
வாயெல்லாம் பால்பொங்க
பட்டுப் புதுச்சோறு
பொங்கிவரும் பொங்கலிது
கரும்பைக் கைபிடிக்க
கட்டழகைக் கண்பிடிக்க
குறும்பைச் சொல்பிடிக்க
குமரியிதழ் தேன்வடிக்க
வயலில் வாய்க்காலில்
ஒய்யார நடைநடந்து
பயலும் பொண்ணுகளும்
பாடிவரும் பொங்கலிது
வீட்டுப் பசுமாடும்
வயலேறும் எருதுகளும்
பாட்டுச் சலங்கைகட்டி
பொன்னழகுப் பொட்டுவச்சி
தோட்டத் தெருவெல்லாம்
தொலைதூர வெளியெல்லாம்
ஆட்டம் போட்டுவரும்
அழகுமணிப் பொங்கலிது
மண்ணைக் கையெடுக்க
மனசெல்லாம் மூச்செறிய
பொன்னை அள்ளியதாய்ப்
பெருமிதத்தில் கண்விரிய
அன்னம் கொடுப்பவளின்
அருமைகளை எண்ணிமனம்
நன்றிப் பெருக்கோடு
நிலம்புகழும் பொங்கலிது
இன்று நான் கனடாவில் வாழ்கிறேன். ஆனால் நான் பிறந்ததும் விடலைப் பருவம் முடியும்வரை வளர்ந்ததும் தமிழ் நாட்டில்தான். கிராமங்களால் மட்டுமே சூழப்பட்ட இந்த ஒரத்தநாட்டுக்காரனின் ஒரு கவிதை. பசுமையாய் என் நெஞ்ச வெளிகளில் மிதந்துகொண்டிருக்கும் தை மாதக் கதை.
மஞ்சள் கொத்தோடு
மாமரத்து இலையோடு
இஞ்சித் தண்டோடு
எறும்பூரும் கரும்போடு
வட்டப் புதுப்பானை
வாயெல்லாம் பால்பொங்க
பட்டுப் புதுச்சோறு
பொங்கிவரும் பொங்கலிது
கரும்பைக் கைபிடிக்க
கட்டழகைக் கண்பிடிக்க
குறும்பைச் சொல்பிடிக்க
குமரியிதழ் தேன்வடிக்க
வயலில் வாய்க்காலில்
ஒய்யார நடைநடந்து
பயலும் பொண்ணுகளும்
பாடிவரும் பொங்கலிது
வீட்டுப் பசுமாடும்
வயலேறும் எருதுகளும்
பாட்டுச் சலங்கைகட்டி
பொன்னழகுப் பொட்டுவச்சி
தோட்டத் தெருவெல்லாம்
தொலைதூர வெளியெல்லாம்
ஆட்டம் போட்டுவரும்
அழகுமணிப் பொங்கலிது
மண்ணைக் கையெடுக்க
மனசெல்லாம் மூச்செறிய
பொன்னை அள்ளியதாய்ப்
பெருமிதத்தில் கண்விரிய
அன்னம் கொடுப்பவளின்
அருமைகளை எண்ணிமனம்
நன்றிப் பெருக்கோடு
நிலம்புகழும் பொங்கலிது
YouTube கவிமுகம் அறிமுகம் புகாரி கனடா
திசைகள் விழா கவிமு்கத்தின் அறிமுகம் கவிஞர் புகாரி கனடா - சிறப்புரை கவிப்பேரரசு வைரமுத்து - தலைமை திசைகள் மாலன் - விமரிசனம் கவிஞர்கள் இந்திரன் யுகபாரதி வைகைச்செல்வி அண்ணாகண்ணன் - சென்னை உட்லண்ட்ஸ் ஹோட்டல்

*****12
மௌனமே உனை நான் நேசிக்கிறேன்
மௌனமே....
உனை நான் நேசிக்கிறேன்
உன் உதடுகளுக்குள்
ஒளிந்துகொள்ள யாசிக்கிறேன்
மௌனம் கலையக் கலைய
வாழ்க்கை கலைந்து போகிறது
மௌனம் கலையக் கலைய
உணர்வுகள் உதிர்ந்து போகின்றன
மௌனம் கலையக் கலைய
அர்த்தமான அத்தனையும்
அனர்த்தமாகிச் சிதைகின்றன
மௌனம் கலையக் கலைய
உயரே உயர்ந்த மதிப்பீடுகள்
மெல்ல மெல்லச் சரிகின்றன
மௌனம் கலையக் கலைய
உதடுகளை உதிர்த்துவிட்டு
விழிகள் ஊமைகளாகின்றன
முத்தத்திலும்
நான்கு உதடுகளும்
ஒரு யுத்தத்தில் சிக்கிக்கொள்ளும்
மௌன முத்தமே மிக அழுத்தமானது
மௌன ரதங்களில்தான்
காதல் கற்பிழக்காமல்
உலா விருகிறது
மௌன முறங்களால்தான்
துயரம் துரத்தப்படுகிறது
மௌனச் சுவர்களால்தான்
பல யுத்தங்கள்
துவங்கப் படாமலே இருக்கின்றன
மௌன மூலிகைதான்
மனக்காயங்களின் மருந்தாகிறது
மௌனத் தழுவல்களில்தான்
அன்பு விரிந்து பரவுகிறது
மௌன மத்தியில்தான்
மனசாட்சியே விழித்திருக்கிறது
மௌனமே
உனை நான் நேசிக்கிறேன்
உன் உதடுகளுக்குள்
ஒளிந்துகொள்ள யாசிக்கிறேன்
10
வார்த்தைகள் ஒன்றை ஒன்று
கவ்விக் கவ்விக் கூத்தாட
வேடிக்கை பார்க்கிறோம்
நாம் பேசிக்கொண்டிருக்கவில்லை
பல்லாயிரம் சிலிர்ப்புகளை
வார்த்தைகளாய் இறைத்து
அவற்றின் மீது நடந்து நடந்து
கரைந்து போகிறோம்
நாம் பேசிக்கொண்டிருக்கவில்லை
காதலிக்கிறேன் உன்னை எப்போதும்
கவ்விக் கவ்விக் கூத்தாட
வேடிக்கை பார்க்கிறோம்
நாம் பேசிக்கொண்டிருக்கவில்லை
பல்லாயிரம் சிலிர்ப்புகளை
வார்த்தைகளாய் இறைத்து
அவற்றின் மீது நடந்து நடந்து
கரைந்து போகிறோம்
நாம் பேசிக்கொண்டிருக்கவில்லை
காதலிக்கிறேன் உன்னை எப்போதும்
***10
யார் அனாதை
யாருமற்றுப் போனாயோ - கண்ணே
ஏக்கவிழி அலைந்தாயோ
வேரொழிந்த பூங்கொடியோ - கண்ணே
விரலெறிந்த நகச்சிமிழோ
யாருந்தான் அடிக்கலியே -கண்ணே
ஏனழுது நிற்கின்றாய்
யாருந்தான் அடிக்கலியே - கண்ணே
அதற்கழுதோ நிற்கின்றாய்
தெருவோரம் கிடந்தாலும் - கண்ணே
தெய்வத்தின் உயிர்தானே
வருவோரும் போவோரும் - கண்ணே
இருப்போரின் தொடர்தானே
வயிறெல்லாம் வேறென்றால் - கண்ணே
உறவென்றால் பொருளுண்டோ
துயருள்ளம் கதறுகையில் - கண்ணே
துணைநிற்கும் தூணுண்டோ
கையோடு கைகுலுக்கு - கண்ணே
கைவளர்ந்து வான்கிள்ளும்
கையிரண்டும் உனதென்று - கண்ணே
கர்வமனம் புவிவெல்லும்
மெய்யான உறவுதேடி - கண்ணே
பொய்யான பூதலத்தில்
மெய்யறியும் வேளையுந்தன் - கண்ணே
கைதானே கவசமாகும்
இடதுகையோ யாசிக்க - கண்ணே
இல்லாளும் யோசிக்க
வலதுகையும் வந்துதானே - கண்ணே
வாட்டத்தைத் தூசாக்கும்
கொடுக்கின்ற மாந்தருக்கு - கண்ணே
எடுப்போர்கள் உறவாவர்
கொடுப்போனாய் நிலைத்துவிடு - கண்ணே
குறையில்லா உயிராவாய்
யார் அனாதை
யாருமற்றுப் போனாயோ - கண்ணே
ஏக்கவிழி அலைந்தாயோ
வேரொழிந்த பூங்கொடியோ - கண்ணே
விரலெறிந்த நகச்சிமிழோ
யாருந்தான் அடிக்கலியே -கண்ணே
ஏனழுது நிற்கின்றாய்
யாருந்தான் அடிக்கலியே - கண்ணே
அதற்கழுதோ நிற்கின்றாய்
தெருவோரம் கிடந்தாலும் - கண்ணே
தெய்வத்தின் உயிர்தானே
வருவோரும் போவோரும் - கண்ணே
இருப்போரின் தொடர்தானே
வயிறெல்லாம் வேறென்றால் - கண்ணே
உறவென்றால் பொருளுண்டோ
துயருள்ளம் கதறுகையில் - கண்ணே
துணைநிற்கும் தூணுண்டோ
கையோடு கைகுலுக்கு - கண்ணே
கைவளர்ந்து வான்கிள்ளும்
கையிரண்டும் உனதென்று - கண்ணே
கர்வமனம் புவிவெல்லும்
மெய்யான உறவுதேடி - கண்ணே
பொய்யான பூதலத்தில்
மெய்யறியும் வேளையுந்தன் - கண்ணே
கைதானே கவசமாகும்
இடதுகையோ யாசிக்க - கண்ணே
இல்லாளும் யோசிக்க
வலதுகையும் வந்துதானே - கண்ணே
வாட்டத்தைத் தூசாக்கும்
கொடுக்கின்ற மாந்தருக்கு - கண்ணே
எடுப்போர்கள் உறவாவர்
கொடுப்போனாய் நிலைத்துவிடு - கண்ணே
குறையில்லா உயிராவாய்
Subscribe to:
Posts (Atom)