Showing posts with label * * 20 விழாக்கள். Show all posts
Showing posts with label * * 20 விழாக்கள். Show all posts

நினைத்துப் பார்க்கிறேன் - திசைகள் மாலன்

நினைத்துப் பார்க்கிறேன்

2005ல் சென்னை சென்றதும். திசைகள் எனக்கு அறிமுக விழா வைத்ததும். எழுத்தாளர் மாலன் தலைமை ஏற்று உரை நிகழ்த்தியதும் கவிப்பேரரசு வைரமுத்து சிறப்புரை ஆற்றியதும், கவிஞர் இந்திரன், கவிஞர் யுகபாரதி, கவிஞர் வைகைச் செல்வி, கவிஞர் அண்ணாகண்ணன் ஆகியோர் நூல் விமரிசனங்கள் தந்ததும், மறக்கமுடியாத நிகழ்வுகள்


சென்னையில் திசைகளின் கவிமுகம் அறிமுகம் விழாவில் திசைகள் மாலன் கனடாவில் வாழும் கவிஞர் புகாரி அவர்களை அறிமுகம் செய்து தலைமையுரை ஆற்றுகிறார். சிறப்புரை கவிப்பேரரசு வைரமுத்து. விமரிசனம் கவிஞர்கள் இந்திரன் யுகபாரதி அண்ணாகண்ணன் வைகைச்செல்வி

விழா - காதலிக்கிறேன் உன்னை எப்போதும்



சென்னை வெளியீட்டு விழா புகைப்படங்கள்

நவம்பர் 21 2010 பாரதீய வித்யா பவன் மைலாப்பூர்

திரிசக்தி பப்ளிகேசன்ஸ்
டாக்டர் சுந்தர்ராமன்
இசைக்கவி ரமணன்
கவிஞர் கபிலன் வைரமுத்து
கவிஞர் ரத்திகா
கவிஞர் புகாரி

YouTube திருச்சியில் ’அறிதலில்லா அறிதல்’ வெளியீடு



கவிதை எழுதுவது இயல்பானது. அதை நூலாய் இடுவது சிரமமானது. அந்த நூலை பாராட்டுபவர்களின்முன் வெளியிடுவதோ மிகவும் இனிமையானது.

ஒரு புலம்பெயர் தமிழனின் கனடிய வாழ்வு



ஒரு புலம்பெயர் தமிழனின் கனடிய வாழ்வு - அன்புடன் புகாரி கனடா

911 Twin Towers Terrorism



நேரடி உணர்வுகளின் கவிக்கோலம் - செப்டம்பர் 11, 2001 இரட்டைக் கோபுரம்

YouTube கவிஞர் வைகைச்செல்வி



கவிஞர் வைகைச்செல்வியின் சிறப்புக் கருத்துரை

YouTube ஒன்றல்ல சொர்க்கம் இரண்டு



அடடா... சொர்க்கம் ஒன்றுதான் என்று எவரேனும் சொன்னால் நம்பாதீர்கள் நண்பர்களே. எனக்குக் கிடைத்ததோ இரண்டு - அன்புடன் புகாரி கனடா

YouTube கவிஞர் அண்ணா கண்ணன் கருத்துரையில்

திசைகள் விழாவில் கவிஞர் அண்ணா கண்ணன் அவர்களின் கருத்துரை

YouTube நியூயார்க் நியூயார்க்

கட்டிடங்கள் அல்ல அவை எழுந்து நிற்கும் வீதிகள் - நியூயார்க் நியூயார்க்

வாழ்க்கையை வியந்து பார்க்கும் ஒரு கவிதை

வாழ்க்கையை வியந்து பார்க்கும் ஒரு கவிதை - புனிதமானது

கவிஞர் இந்திரனின் பார்வையில்



கவிஞர் இந்திரனின் சிறப்பு விமரிசனம் - சரணமென்றேன் காதல் கவிதை நூல் - கனடா கவிஞர் புகாரி

YouTube வேங்கூவர் கனடா



டொராண்டோவிலிருந்து முதன் முறையாக பணி நிமித்தம் நான் வேங்கூவர் சென்று,
அதன் அழகில் மயங்கி, அதன் பளிங்கு வீதிகளிலெல்லாம் இதயம் தள்ளாட இன்ப உலா வந்தேன். ஓர் ஐந்து தினங்கள் சுற்றித் திரிந்துவிட்டு, ஆசைக் காதலியைப் பிரியும் காதல் பித்தனைப்போல் விக்கலெடுக்கும் தொடர் ஏக்கத்தோடு எழில் வேங்கூவருக்கு விடைகொடுத்து நான் விமானத்தில் அமர்ந்தபோது படபடவென்று சிறகடித்துக்கொண்டு என் உள்ளத்தில் வந்து உட்கார்ந்த ஒரு வண்ணத்துக் கவிதைதான் இது.

கவிப்பேரரசு வைரமுத்து சிறப்புரை 3



சென்னையில் திசைகளின் கவிமுகத்தின் அறிமுகம் விழாவில் கவிப்பேரரசு வைரமுத்து கனடாவில் வாழும் கவிஞர் புகாரி அவர்களை அறிமுகம் செய்து சிறப்புரை ஆற்றுகிறார். தலைவர் மாலன். விமரிசகர்கள் கவிஞர்கள் இந்திரன் யுகபாரதி அண்ணாகண்ணன் வைகைச்செல்வி

கவிப்பேரரசு வைரமுத்து சிறப்புரை 2



சென்னையில் திசைகளின் கவிமுகத்தின் அறிமுகம் விழாவில் கவிப்பேரரசு வைரமுத்து கனடாவில் வாழும் கவிஞர் புகாரி அவர்களை அறிமுகம் செய்து சிறப்புரை ஆற்றுகிறார். தலைவர் மாலன். விமரிசகர்கள் கவிஞர்கள் இந்திரன் யுகபாரதி அண்ணாகண்ணன் வைகைச்செல்வி

கவிப்பேரரசு வைரமுத்து சிறப்புரை 1

சென்னையில் திசைகளின் கவிமுகத்தின் அறிமுகம் விழாவில் கவிப்பேரரசு வைரமுத்து கனடாவில் வாழும் கவிஞர் புகாரியை அறிமுகம் செய்து சிறப்புரை ஆற்றுகிறார். தலைவர் மாலன்.

YouTube கவிமுகம் அறிமுகம் புகாரி கனடா

திசைகள் விழா கவிமு்கத்தின் அறிமுகம் கவிஞர் புகாரி கனடா - சிறப்புரை கவிப்பேரரசு வைரமுத்து - தலைமை திசைகள் மாலன் - விமரிசனம் கவிஞர்கள் இந்திரன் யுகபாரதி வைகைச்செல்வி அண்ணாகண்ணன் - சென்னை உட்லண்ட்ஸ் ஹோட்டல்

அரபுக் கனலிலே எத்தனைக் காலம்


இந்தப் பாடலுக்கான முன்னுரையில், என் தாயைப் பற்றி ஓரிரு வார்த்தைகள் சொல்ல ஆசைப்படுகிறேன். முப்பது வயதுக்குள் ஆறு பிள்ளைகளைப் பெற்றெடுத்துக் கொண்டு
தன் கணவனைக் காலனிடம் வாரிக்கொடுத்துவிட்ட பாலை மணலலை என் தாய்.

என் தாயின் வெள்ளைச் சேலையை மாற்றி வண்ணச் சேலை கட்டச் சொல்லி தினமும் அழுவேன் என் ஒன்பது வயதில். செய்வதறியாது என் தாய் என்னோடு சேர்ந்து அழுவார்.

நான் வெளிநாடு செல்ல வேண்டும் என்று என் அம்மா என்னைப் பெற்றெடுக்கவில்லை. என் தாயின் துயர நிலை கண்டு என் கண்கள் கழன்று விழுந்தன. நானே வீட்டில் மூத்த ஆண் மகன்.

வேலையில்லா திண்டாட்டம் பற்றி, பற்றி எரியும் கவிதைகள் எழுதிக்கொண்டு வீட்டில் சாம்பலானது போதும் என்று அவசரமாய் முடிவெடுத்தேன்... பாலைவனம் புறப்படேன்.

அப்படியே இரத்த நாளங்களைப் பிய்த்துக்கொண்ட பயணமான அந்த நாளை என்னால் மறக்கமுடியாது.

அம்மாவின் அறுவைச் சிகிச்சைக்குப் பத்தாயிரம் பணம் வேண்டும் என்றார்கள். நான் சவுதி அரேபியாவுக்குச் சென்றிருக்காவிட்டால் அதை என்னால் கொடுத்திருக்கவே முடியாது. அறுவை சிகிச்சை செய்த மருத்துவர் சொன்னார் இது இரண்டாவது உம்மல் பரிதா என்று. அதுதான் என் தாயின் பெயர்.

அப்போது சவுதியில் இருந்தபடியே ”பவளக்கொடியிலே முத்துக்கள் பூத்தால்” என்ற பாடலின் மெட்டுக்கு இப்படி ஒரு பாடலை எழுதினேன்.



அரபுக் கனலிலே எத்தனைக் காலம்
வாழ்க்கை என்னும் பூ வாடும்

பூக்க மறந்து சருகாய்ச் சிதைய
யார் விட்ட சாபம் அரங்கேற்றம் - இங்கு
யார் விட்ட சாபம் அரங்கேற்றம்

பூங்கவிக் குயிலொன்று தானே முன்வந்து
பணம் தரும் கரங்களில் விழி பெருக்கும்

பூமெத்தை மடிகளில் பெட்ரோல் வளங்களில்
புரள்கின்ற அரபிக்கு விலையாகும் - என்றும்
புரள்கின்ற அரபிக்கு விலையாகும்

தாய்மலர் இதயத்தில் தீயொன்று விழுந்தது
துணைநின்று காத்திட வழியேது

உருக்கிய இரத்தம் பணமாய்ப் பூத்தது
தாய் உயிர் காத்தே சிரிக்கின்றது - இன்று
தாய் உயிர் காத்தே சிரிக்கின்றது

சென்னை விழா நன்றியுரை


நீரும் தனித்தே பொழிகிறது - அதன்
தொடுதலில் தாகம் தெரிகிறது

நிலமும் தனித்தே சுழல்கிறது - அதன்
தவிப்பினில் தாய்மை விரிகிறது

காற்றும் தனித்தே அலைகிறது - அதன்
அசைவினில் காதல் மலர்கிறது

நெருப்பும் தனித்தே எரிகிறது - அதன்
வேகத்தில் வேட்கை கொதிக்கிறது

வானம் தனித்தே விரிகிறது - அதன்
மௌனம் உயிரில் நிறைகிறது

தமிழனும் தனித்தே நின்றாலும் - அவன்
சாதனை இயல்பாய் வருகிறது

ஆம்... தமிழன் ஆறாவது பூதம்தான்

என் அன்பினிய ஆறாவது பூதங்களே
உங்களுக்கெல்லாம் எப்படியோ எனக்குத் தெரியாது
எனக்கு இது தேவலோகத்தில் நடக்கும்
இந்திரன் விழா சந்திரன்விழா வென்றெல்லாம் சொல்வார்களே
அவற்றையெல்லாம் விட பலமடங்கு உயர்ந்தது

நான் இந்த விழாவை மறப்பதற்கில்லை
இனி எத்தனையோ விழாக்கள் வரலாம்
ஆனால் முதல் காதல் முதல் முத்தம்போல்
இது என் இதயம் கீறி என்றும் வாழும்
இசைத்தட்டாய் ஆக்கிய விழா

நினைவு இருப்பவர்களால்தான்
தன்னை மறக்க முடியும்
நிம்மதி இருப்பவர்களால்தான்
தளர்ந்து உறங்க முடியும்

அன்பு இருப்பவர்களால்தான்
அள்ளி அணைக்க முடியும்
தெளிவு இருப்பவர்களால்தான்
புதியதைப் பொழிய முடியும்

கனவு இருப்பவர்களால்தான்
விரைந்து வெல்ல முடியும்
கற்பனை இருப்பவர்கலால்தான்
விரிந்து பறக்க முடியும்

கவிதை இருப்பவர்களால்தான்
ரசித்து வாழ முடியும்
இதயம் இருப்பவர்களால்தான்
உண்மையாய் வாழ்த்த முடியும்

என்னை வாழ்த்திய உயர்ந்த உள்ளங்களுக்கு
என் உயிரின் நன்றி இழைகள்....

என் செல்ல மகள் தொட்டு இந்த அரங்கை விட்டுச்
செல்லாத கடைசி தமிழர்வரை அனைவருக்கும்....

பழைய சுவடுகளைப் பாடமாக்கிக்கொண்டு
புதிய சுவடுகளைப் பயணமாக்கிக்கொள்ளும்
இந்த புகாரியின் நன்றியும் வணக்கமும்

இவ்வேளையில்....
பத்தே தினங்களில் என் நான்காவது கவிதை நூலான பச்சைமிளகாய் இளவரசியை அச்சில் கோத்துத்தந்த மணிமேகலை பிரசுரம் திரு ரவி தமிழ்வாணன் அவர்களுக்கும்

சரணமென்றேன் கவிதைநூலை காவ்யாவில் அச்சிட மிகுந்த சிரமங்களை எடுத்துக்கொண்ட கவிஞர் வைகச் செல்வி மற்றும் அவர் கணவர் என் இனிய நண்பர் திரு வேணுகோபால் அவர்களுக்கும், என் தொலைபேசி குரல்கேட்டதுமே ஒரு சிறந்த தேனீயைப் போல சுறுசுறுப்பாய் சின்னச்சின்னக் காரியங்களையும் சிரத்தையாய் செய்துமுடித்து என்னைத் திக்குமுக்காடவைத்த திருமதி காந்தி ஜெகன்னாதன் அவர்களுக்கும், நான் என் ஒவ்வொரு கவிதைத் தொகுப்பு இடும்போதும் என் கவிதைகளைக் கோர்த்து முத்துமாலையாய் ஆக்கித்தரும் என் அன்பிற்கினிய கவிதை நண்பர் கவிஞர் சேவியர் அவர்களுக்கும் என் பிரத்தியேக நன்றிகள்.

இறுதியாக நான் சொல்லப்போவது இதைத்தான். தமிழர்தம் அடையாளம் தமிழன்றி வேறில்லை தாய்மொழியைத் துறந்தவரோ தன்முகத்தை இழந்தவரே தமிழரோடு பேசும்போது தமிழ்மொழியில் பேசுவோம் தமிழ்த்தாயின் மடிதவழ்ந்து தன்மானம் ஓங்குவோம். வாழ்க தமிழ்