10

வார்த்தைகள் ஒன்றை ஒன்று
கவ்விக் கவ்விக் கூத்தாட
வேடிக்கை பார்க்கிறோம்
நாம் பேசிக்கொண்டிருக்கவில்லை

பல்லாயிரம் சிலிர்ப்புகளை
வார்த்தைகளாய் இறைத்து
அவற்றின் மீது நடந்து நடந்து
கரைந்து போகிறோம்
நாம் பேசிக்கொண்டிருக்கவில்லை

காதலிக்கிறேன் உன்னை எப்போதும்

2 comments:

பூங்குழலி said...

பிரமாதமாக வந்திருக்கிறது புகாரி

பூங்குழலி said...

நாம் பேசிக் கொண்டிருக்கவில்லை என்ற வரி என் மனதில் ஓடிக் கொண்டே இருக்கிறது