எங்கேயோ....

எங்கேயோ உலவும்
ஒரு மேகம்
இந்த மனதை
நனைக்கக்கூடும்.

எங்கேயோ
பூக்கும்
ஒரு பூ
இந்த நாசிக்குள்
வாசம் வீசக்கூடும்

எங்கேயோ
வீசும்
ஒரு தென்றல்
இந்த தேகத்தைத்
தொட்டுத் தழுவக்கூடும்

எங்கேயோ
பாடும்
ஒரு பாடல்
இந்த உயிரை
உசுப்பிவிடக்கூடும்

No comments: