கிறுக்கு மனம் தவிக்குதே எதைச் சொல்ல

விடைபெற்றுப்
பாழாகும் தினங்கள்
பெரும்
வெற்றியென நினைக்கின்ற
ரணங்கள்

அடைகாத்த
முட்டைகளும் குஞ்சாகும்
ஆனால்
சினம்காத்த நெஞ்சமோ
நஞ்சாகும்

கடக்கின்ற
நாளேதும் மீளாது
என்றும்
கடப்பாரை குடலுக்குள்
வேகாது

தடையில்லா
வாய்க்காலில் நீரோடும்
தினம்
தடுகின்ற உள்ளத்தால்
எது வாழும்

1 comment:

திண்டுக்கல் தனபாலன் said...

/// அடைகாத்த முட்டைகள் குஞ்சாகும் - ஆனால்
சினம்காத்த நெஞ்சமோ நஞ்சாகும் ///

அழகிய சொல்லாடல்...