*** 42 ஈழத்தாமரை

சூரியன் எழுந்து
சிவப்பைக் கழுவி
வெண்மை விதைக்க
வெளிச்சம் முளைக்கும்

வீதிகளின் பீதி
வெறுமைகளின் துயரம்
கிழிந்த விழிகளில்
கதறியழும் கனவுகள்
புதைந்த எலும்புகளில்
கொப்பளிக்கும் குருதி
நிறுத்தம் கொள்ளும்

இலங்கைத் தடாகத்தில்
ஈழத்தாமரை
அமைதியின் தாலாட்டில்
தொட்டிலும் துயில
சிங்களத் தீவுக்கு
நெடுஞ்சாலைப் பாலம்
நீளும் கவிதையாய்

1 comment:

Anonymous said...

கவிதையும் படமும் மனதை தொடுகிறது புகாரி...

"என்று தணியும் இந்த சுதந்திர தாகம்'"...ம்ம்ம்...:(

அன்புடன்...
வாணி