48

ஏனோ இப்படி
என் இதயத்தின் சந்துகளில்
நடையாய் நடக்கிறாய்
உனக்குக்
கால்கள் வலிப்பதில்லையா

ஏனோ இப்படி
என் தூக்கத்தை தூக்கிச்சென்று
காலுக்கிடையில் வைத்துக்கொண்டு
மௌன மரக்கிளையில்
பாட்டுப் பாடிக்கொண்டிருக்கிறாய்

யார் நீ
என் பைத்தியம் தீர்க்க வந்தவளா
பைத்தியம் ஆக்க வந்தவளா

என் தாக விழிகளுக்குள்
உறக்கத்தைக்
கொட்ட வந்தாயா
கொரிக்க வந்தாயா

சொல்
உன் கண்களின் தீபம்
எப்படி என்னை மெழுகுவத்தியாக்கி
இப்படி உருக்கி எடுக்கிறது

காதலிக்கிறேன் உன்னை எப்போதும்

4 comments:

பூங்குழலி said...

ஏனோ இப்படி
என் இதயத்தின் சந்துகளில்
நடையாய் நடக்கிறாய்
உனக்குக் கால்கள் வலிப்பதில்லையா
ஏனோ இப்படி
என் தூக்கத்தை தூக்கிச்சென்று
காலுக்கிடையில் வைத்துக்கொண்டு
மௌன மரக்கிளையில்
பாட்டுப் பாடிக்கொண்டிருக்கிறாய்

நல்லா இருக்கு

அன்புடன் மலிக்கா said...

/யார் நீ
என் பைத்தியம் தீர்க்க வந்தவளா
பைத்தியம் ஆக்க வந்தவளா
என் தாக விழிகளுக்குள்
உறக்கத்தைக் கொட்ட வந்தாயா
கொரிக்க வந்தாயா/

தெரியாமலே கவிதைத்தேனை வடித்து வடித்து குடிக்கிறீர்களா ஆசான்..

சூப்பராக இருக்கு வரிகள் அத்தனையும்...

N Suresh said...

எப்போதும் உன்னை காதலிக்கிறேன் என்ற வாசகம் காதலர்களிடையில் என்றும் உண்மையின் அழகாக மலரட்டும்.

அன்புடன் என் சுரேஷ்

vasu balaji said...

/யார் நீ
என் பைத்தியம் தீர்க்க வந்தவளா
பைத்தியம் ஆக்க வந்தவளா
என் தாக விழிகளுக்குள்
உறக்கத்தைக் கொட்ட வந்தாயா
கொரிக்க வந்தாயா/

அருமை!