பள்ளி இறுதிவரை தமிழ்வழிக் கல்வியையும் அதன்பின் ஆங்கிலவழிக் கல்வியையும் நான் ஆதரிக்கிறேன்.

இப்படியே இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் அவரவர் தாய்மொழியில் பள்ளி இறுதிவரை பயின்றும் பின் ஆங்கில வழியில் பயின்றும் வந்தால் இந்தியா சிறக்கும்.

இடையில் இந்தியை நுழைத்துத்தான் இந்தியக் கலாச்சாரச் செழுமைகளைப் பாழ்படுத்துகிறார்கள். இந்தி வேண்டுமானால் மத்தியப் பிரதேசத்தில் மட்டும் இருந்துவிட்டுப் போகட்டும். அவர்களின் தாய் மொழி என்னவென்று என்னால் அறியமுடியவில்லை. அந்த அளவுக்கு அங்கே அழிப்பு நிகழ்ந்துவிட்டதாக இருக்கலாம்.

அன்புடன் புகாரி

No comments: