>>>மேலும் மேலும் தமிழ் மக்கள் தங்கள் பிள்ளைகளுக்கு ஆங்கில வழிக்கல்வியையே விரும்புகிறார்கள். அது ஏன், அதற்கு என்ன தீர்வு என்பதை சிந்திக்க வேண்டும்<<<<
1. பள்ளி இறுதிவரை தமிழ்நாட்டில் தமிழ்வழிக் கல்வி கட்டாயம். 
2. பள்ளி இறுதிக்குள் சரளமாக ஆங்கிலம் பேசவும் எழுதவும் உச்சரிக்கவும் கற்றுத்தரும் சிறப்புப் பாடத்திட்டம்
3. கல்லூரிகளில் அவரவர் விருப்பம்போல ஆங்கிலவழி, தமிழ்வழிக் கல்வி
4. கலைச்சொல்லாக்கத்தில் கெடுபிடி காட்டாத ஆங்கிலப் பெயர்ச்சொற்களை ஏற்கும் அறிவியல், கணிதம் போன்றவற்றின் பாடத் திட்டங்கள்
5. தமிழ்வழிக் கல்வி பயின்றவர்களுக்கு மட்டும் தமிழகம் முழுவதும் அரசு நிறுவனங்களில் வேலைவாய்ப்பு. தனியார் நிறுவனங்களில் தமிழ்வழிக் கல்வி பயின்றவர்களுக்கு முன்னுரிமை.
6. தமிழ்வழிக் கல்வி பயின்றவர்களுக்கு, மருத்துவம், பொறியியல் போன்ற உயர் படிப்பில் சேர்வதற்கு தமிழகத்தில் முன்னுரிமை
இப்படியான மாற்றங்களைக் கொண்டுவந்த பின்னர் தமிழ் மக்கள் எதை விரும்புவார்கள் என்று நினைக்கிறீர்கள்?
அன்புடன் புகாரி

No comments: