தமிழ் செத்தால்தான் என்ன? யாருக்கு நட்டம்? என்று கேட்போர் அதிகரிப்பதைக் காண்கிறேன்
எங்கே பிழை?
தமிழுக்கு என்று ஒரு நாடு இல்லை. நாடில்லாத தமிழைக் கட்டிக் காக்க வளர்த்தெடுக்க அதன் வரலாறு பேச புழக்கத்தில் இருந்த சொற்களெல்லாம் உதிர்ந்துபோகாமல் காக்க என்று செயல்படும் எந்த வலுவான அமைப்பும் ஓர் அரசு இல்லாமல் திறம்பட நிகழ்வது கடினம்
தமிழ்ச் சங்கங்கள் எல்லாம் பட்டிமன்றங்கள் நடத்தவே என்றாகின
நடிகர்களை வைத்து கூட்டம் சேர்த்து கேளிக்கையில் கரைந்து போகின்றன சங்கங்களின் கொள்கைகள்
நுணுக்கமான ருசிமிக்க தமிழ் பேசும் மேடைகள் மிகக் குறைவு, ஊடகங்கள் இல்லவே இல்லை
கடந்த ஆண்டு கம்பனின் கவித்திறன் பேசிய ஓர் அருமையான உரை கேட்டு பெருமகிழ்வடைந்தேன்.
அது போல் இன்னொன்று என்று வரும் என்ற ஏக்கம்மட்டுமே மீதமாக இருக்கிறது இன்றுவரை
ஒன்றைக் காக்க வேண்டும் என்றால் முதலில் அதை நேசிக்க வேண்டும், அல்லவா?
நேசிக்கும் படியான தமிழின் செழுமைகள், வேர்கள், பண்பாடுகள் எங்கே பேசப்படுகின்றன?
கேட்டுப் புரிந்துகொள்வோர், புரிந்து பூரிப்போர் பத்துக்கு ஒருவர் தேறுவரா?
அன்புடன் புகாரி

No comments: