தமிழ் முஸ்லிம் ஒருவர் மரணம் அடைந்துவிட்டால். துக்கத்தில் பங்குகொள்ள விரும்பம் முகநூல் முஸ்லிம்கள்

”இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜி'வூன்”

என்று எழுதுகிறார்கள். அத்தோடு நின்றும்விடுகிறார்கள். வேறு எதுவும் சொல்வதும் இல்லை.

இன்னாலில்லாஹி வ இன்ன இலைஹி ராஜுவூன் என்றால் என்ன பொருள்?

இறைவனிடமிருந்து வந்தோம், அவனிடமே செல்கிறோம். இதுதான் பொருள்.

அதை ஏன் தமிழில் சொல்லாமல் அரபுவார்த்தைகளில் சொல்கிறார்கள்? நமக்கு அத்தனை அரபிக் தெரியுமா? நாம் அரபு மொழியிலா தினம் உரையாடிக்கொண்டிருக்கிறோம்?

இன்னாலில்லாஹி என்ற சொற்றொடரைப் பயன்படுத்தினால்தான் இறைவனுக்குத் தெரியுமா? அல்லது சுற்றம் உறவு நண்பர்களுக்குத் தெரியுமா? தமிழ்முஸ்லிம்களுக்குத் தமிழில் சொன்னால்தானே புரியும் தெரியும் விளங்கும் போய்ச் சேரும்.

அதுமட்டுமல்லாமல், கூடவே துவா செய்கிறேன் என்றும் கூறினால் நன்றாக இருக்குமே. துவா என்பதுமட்டும் தமிழா என்று கேட்கலாம். அது நல்ல கேள்விதான்.

இதுபோல் தமிழுக்குள் வந்து புழங்கும் அரபுச் சொற்கள், வடமொழிச் சொற்கள், பார்சி சொற்கள் நிறைய உண்டு. அவை ஏற்றுக்கொள்ளப்பட்டவை. துவா என்பது வலிந்து உட்புகுத்தியதல்ல.

பிரார்த்தனை என்பது வடமொழி, வேண்டிக்கொள்வது என்பது ஓரளவு எல்லோரும் பயன்படுத்தக் கூடிய சொல்லாக அமையலாம் என்றாலும் அதை ஒரு மதம் சார்ந்ததாய்க் காணும் கண்ணோட்டம் உண்டு. ஆகவே துவா என்ற வார்த்தையைப் பயன்படுத்தலாம்.

இறைவனிடம் மன்றாடுகிறேன் என்று சொன்னால் இந்த துவா என்ற சொல்லும் அவசியமின்றிப் போய்விடும்.

இறைவனிடமிருந்து வந்தோம்
அவனிடமே செல்கிறோம்
இவர் சொர்க்கம்புக இறைவனிடம் வேண்டிக்கொள்கிறேன்/மன்றாடுகிறேன்/துவாச்செய்கிறேன்.

இப்படி இருந்தால் நன்றாக் இருக்கும் அல்லவா?

நாம் என்ன எழுதுகிறோம் என்று முஸ்லிம்களுக்கு மட்டுமின்றி தமிழ் உலகுக்கே தெரியும் அல்லவா?

அன்புடன் புகாரி



No comments: