உருதுவும் அராபிக்கும்
------------------------------------

முகநூலில் உரையாடும்போது உருதுவில் சொல்லப்படும் பாங்கின் ஓசை என்று ஒருவர் குறிப்பிட்டார்.

அது பிழை.

பாங்கு என்பது தொழுகைக்காக இசைகூட்டி உரத்து விடுக்கப்படும் அழைப்பு.

அது சொல்லப்படுவது உருது மொழியில் அல்ல அரபி மொழியில்.

குர்-ஆன் அரபி மொழியில்தான் எழுதப்பட்டுள்ளது உருதுமொழியில் அல்ல.

இந்தியாவில் உள்ள சிலர் உருதுதான் முஸ்லிம்களின் மொழி என்று பிழையாக நினைத்திருக்கின்றனர்.

உருது என்பது சமஸ்கிருதம் பார்சி அரபி எல்லாம் கலந்தடித்து வந்த வணிகர்களின் தொடர்பு மொழி.

அதை இரண்டாகப் பிரித்தார்கள். ஒன்று ஹிந்தி ஆனது அடுத்தது உருது ஆனது.

ஹிந்தி இந்துக்களின் மொழியென்றும் உருது முஸ்லிம்களின் மொழியென்றும் மத ரீதியாக வேறுபாடு காட்டி பிரித்துக் கொண்டனர்.

மற்றபடி பேசும் போது இரண்டும் ஒன்றாகவே இருக்கும் பெரும்பாலும். ஒரே வகையான  அமைப்பு இலக்கணம் பேச்சுமுறை என்று மாற்றமில்லாமல் இருக்கும்.

ஹிந்தி இந்திய மொழி என்றும் உருது பாகிஸ்தானி மொழியென்றும் ஆக்கிக்கொண்டார்கள்.

ஓர் ஹிந்திக்காரனும் ஓர் உருதுக்காரனும் எந்த சிக்கலும் இல்லாமல் உரையாடிக்கொள்வார்கள். ஏனெனில் இரண்டும் கிட்டத்தட்ட ஒன்றுதான்.

ஹிந்திக்கு தேவநகரி (சமஸ்கிருத) எழுத்துவடிவம்.

உருதுக்கு சில எழுத்துக்களைச் சேர்த்துக்கொண்ட அரபி எழுத்து வடிவம்.

அவ்வளவுதான் வேறுபாடு.

இந்த இரண்டு மொழிகளுமே சமீபத்திய மொழிகள்தாம்.

தமிழுக்கு முன் இவை நிற்கவே தகுதியற்றவை.

அன்புடன் புகாரி

No comments: