காதல் நிகழ்வுகள்

உன்
பவள விரல்கள்
என் பிடறி முடிக்குள் புகுந்து
காதல் தேடும்போது

காம்பில் தவமிருக்கும்
அத்தனைப் பூக்களும்
மொட்டுடைந்து போகின்றன

பச்சைப் போர்வைக்குள்
படுத்துறங்கும்
காய்களெல்லாம்
பழங்களாய்ப்
பழுத்துவிடுகின்றன

ஐம்பூதங்களும்
நரம்புகளுக்குள்
புகுந்து
ஆட்சி செய்கின்றன

No comments: