*59 நிழல்கள்


*
நம்பிக்கை நிழலில்
ஓர்
இன்பதின் நிழல்
காண
காலத்தின் நிழலில்
நின்றேன்

தினம்
துன்பத்தின் நிழல் தந்த
சாவின் நிழலில்
நான்
வாழ்வின் நிழல்
கண்டேன்

*


நான் என் முதல் தோல்வியைச் சந்தித்ததும் எழுதிய கவிதை இது. அப்போது நான் கல்லூரியில் முதலாமாண்டு பட்டப்படிப்பு படித்துக் கொண்டிருக்கிறேன்.

இந்தக் கவிதை அப்போதைய என் மனோநிலை. அதை அப்படியே படம்பிடித்துக் காட்டியிருக்கிறேன்.

பிறகெல்லாம் இந்தக் கவிதை நம்பிக்கையைத் தரவில்லை, எனவே இது நல்ல கவிதை இல்லை என்று முடிவெடுத்து கிழித்துப்போட்டுவிட்டேன்.

ஆனால் இன்னொரு சோகம் வந்து தன் முரட்டுக்கொம்புகளால் முட்டியபோது இந்தக் கவிதையின் வரிகள் தானே நினைவுக்கு வந்துவிட்டன.

வாழ்வில் நாம் ஏராளமான சோகங்களை எல்லா நிலைகளிலும் சந்திக்கத்தானே வேண்டும்?

அப்படி ஆட்டிப்படைக்கும் ஒரு கவிதையை நான் ஏன் கிழித்தெறிய வேண்டும்?

என் ஆறாவது கவிதை நூலிலேயே ஏற்றிவிட்டேன்.

No comments: