68

அன்பே நீ பேசினாய்
என் அடிவயிற்றில் இறங்கி
உன் குரல் குதூகலிக்கிறது

அன்பே நீ சிரித்தாய்
என் ஆயுளின்
அத்தனை அறைகளிலும்
சங்கீதம் கேட்கிறது

அன்பே நீ தொட்டாய்
உயிரின் அத்தனை சந்துகளிலும்
வண்ணத்துப் பூச்சிகள்
சிறகடித்துப் பறக்கின்றன

அன்பே நீ முத்தமிட்டாய்
மடிவதும் பிறப்பதுமாய்
எனக்குள் பில்லியன் பிறப்புகள்

காதலிக்கிறேன் உன்னை எப்போதும்

2 comments:

Unknown said...

Podhumaa Buhari billion piravigal...
-Shanthi

கவிஞர் சேவியர் said...

//அன்பே நீ சிரித்தாய்

என் ஆயுளின்
அத்தனை அறைகளிலும்
சங்கீதம் கேட்கிறது

அன்பே நீ தொட்டாய்
உயிரின் அத்தனை சந்துகளிலும்
வண்ணத்துப் பூச்சிகள்

சிறகடித்துப் பறக்கின்றன//

கவிதைகளாய்க் கொட்டி மின்னஞ்சலையே மிதக்க வைத்தீர்கள் நண்பரே.. நன்றிகள் பல !