தீக்குச்சியாய் இருப்பது
எளிது
தீயணைப்புப் படையாய் இருப்பதோ
கடினம்

தீக்குச்சி தன் தலையில்
கொல்லி நெருப்பின்
கனத்தோடு மட்டுமே
இருக்கிறது

அந்தத் தலைக்கனம்
உரசும்போதெல்லாம்
பற்றி எரியும் தீயைக் கண்டு
அது
கைகொட்டி மகிழ்ந்தாலும்

உண்மையில்
அந்தத் தீக்குச்சியும்கூட
அதில்
கருகிப் போய்தான்
வீழ்கிறது என்பதை
அது
அறியாமல்தான் இருக்கிறது

தனக்கான பாதிப்பையும்
பொருட்படுத்தாத
தீயணைப்புச் சேவை என்பதோ

அமைதிக்கும்
வன்முறையற்ற வாழ்க்கைக்கும்
உத்திரவாதம் தருகிறது

உறவுகளையும் உயிர்களையும்
காக்கிறது

நியாயத்தைத்
தொட்டுத் தடவி
கோபுரத்தில் ஏற்றி வைத்து
பெருமை கொள்கிறது



No comments: