அன்பே,

நீ மனிதர்களுக்கு மிகுந்த மரியாதை தரவேண்டும். மனிதர்களிடம் மிகுந்த அன்பு காட்டவேண்டும். இறைவன் ஒருவனுக்குத்தான் பயப்படவேண்டும்.

உன் தந்தையாக இருந்தாலும் அவரிடம் நீ மிகுந்த மரியாதையோடும் அன்போடுமே இருக்க வேண்டும் பயப்படத் தேவையே இல்லை.

அன்பும் மரியாதையும் தராமல் நீ ஒருவருக்குப் பயந்தால், அதன் பொருளே வேறு.

நீ செய்யும் செயல் இறைவனின் முன்னிலையில் சரியா பிழையா என்று ஒரு முறைக்கு இருமுறை யோசித்துக்கொள். நீ தவறு ஏதும் செய்யவில்லை என்று பட்டால் துணிந்து செய்.

ஆயினும் நம் அறிவு ஒரு எல்லைக்கு உட்பட்டது. பின் எவராவது நீ செய்தது பிழை என்பதைத் தண்மையாகப் புரியவைத்தால் அடுத்த நொடியே மன்னிப்புக் கேட்டுவிடு. ஒரு நொடியும் தயங்கிவிடாதே.

இல்லாமல் செய்த நேர்மையான காரியத்திற்காக கூட்டமாய்ச் சேர்ந்துகொண்டோ கட்டாயப்படுத்தியோ மன்னிப்புக்கேட்க எவராவது வலுக்கட்டாயப்படுத்தினால், அப்போதும் நீ மன்னிப்புக் கேள். அதிலும் பிழை இல்லை.

ஏனெனில் மன்னிப்புக் கேட்பது என்பது உயர்வான செயல். அதற்கு நீ குற்றம் செய்திருக்க வேண்டிய அவசியமே இல்லை. அப்படி நீ கேட்கும் மன்னிப்பு என்பது இல்லாதவர்களுக்குத் தாராளமாக அள்ளித் தரும் ஈகையைப் போன்றது. அது உன்னை உயர்வு படுத்தவே செய்யும்.


No comments: