அன்பு என்பது
மரியாதை

ஒருவரை
மரியாதையோடு அழைக்கும்போது
அதில் அன்பு
பேரொளியாய்த் தெரியும்

உரிய மரியாதையைத் தராமல்
கட்டிப் பிடித்துக் கைகுலுக்கினாலும்
குண்டுவைத்துத் தகர்த்த
கட்டிடத்தைப் போல
அன்பு அங்கே
தூள் தூளாகிக் கிடக்கிறது

மரியாதை
என்பது
மகத்தான
அன்பு

ஒருவன்
கோபத்தில் கொதிக்கும்போது
வாங்க போங்கவைக்
குழிதோண்டிப் புதைத்துவிட்டு
வா போ என்று தொடங்கி
வாடா போடா என்றுகூட
தரமிழந்து கத்துவான்

மீண்டும்
அன்பு பொங்கும்போது
மன்னித்து
வாங்க போங்க என்று
உயர்ந்து நிற்பான்

ஆம்
மரியாதை என்பது
மகத்தான அன்பு
மனிதப் பண்பு

No comments: