வாழ்க்கைப் பயணத்தில்
சிலர் நம்மைக்
காரணமேயின்றி நேசிப்பார்கள்
சிலரோ
காரணமேயின்றி வெறுப்பார்கள்

மறுக்குமிடத்தில்
மன்றாடுவதல்ல
கொடுக்குமிடத்தில்
கொண்டாடுவதுதான்
வாழ்க்கை

ஆயினும்
நேசிப்பவர்களையும்
வெறுப்பவர்களையும்
ஒரே விழிகளால் காண்பதற்கு
நம் மனதை நாம்
பக்குவப்படுத்திக்கொண்டே
இருக்க வேண்டும்

நேசிப்பவர்களை மட்டுமே
நேசிக்காமல்
வெறுப்பவர்களையும்
நாம்
நேசிக்க வேண்டும்

வெறுப்பவர்களை வெறுத்துவிடாமல்
அமைதியாகவும் மௌனமாகவும்
புன்னகை உதிர்த்த வண்ணமுமாய்
நகரும்போது
வெறுத்தவர்களும் விரும்புபவர்களாய்
ஒருநாள் ஆவார்கள்

எல்லாவற்றையும்
பேசியே தீர்த்துவிடமுடியாது

சிலவற்றை
உணர்ந்தும் உணரவைத்தும்தான்
தீர்க்க வேண்டும்

அது காலத்தின்
சக்திவாய்ந்த கரங்களில்தான்
இருக்கிறது

இறைவனின்
அளவற்ற அருளில்தான்
இருக்கிறது

No comments: