மரணம்
மன்னிக்கும் மகா மனதை
உங்களுக்குத் தருகிறது

மரணித்தவர்
உங்களை மன்னித்துவிடவும்
செய்கிறது

இறைவனிடம் சென்றவர்
மனிதர்களை
மன்னிப்பவராய் ஆனதில்
ஆச்சரியம் ஏதுமில்லை

எப்போதும்
துவாக்களோடு இருங்கள்

துயரில் இருப்பவர்கள்
தனிமையில் இருக்காதீர்கள்

அன்பு நிறைந்த நெஞ்சு
வெடித்துச் சிதறும்
பஞ்சு

இறைவனிடம்
மன்னிப்புக் கேட்பது
பரிசுத்த நிம்மதிக்கான
கதவுகளைத் திறப்பது

மனதில் இருக்கும் மனிதத்தை
நன்னீரூற்றி வாழவைப்பது

No comments: