பொய்
சொல்பவர்களால் கூட
இல்லை

பொய்களை
ஆய்ந்தறியாமல்
அப்படியே
உண்மையென்று
நம்பும்
மூடர்களால்தான்

வீடு ஊர்
நாடு உலகம்
எல்லாம்
துண்டு துண்டாய்ச்
சிதைவுண்டு

ரத்தம் சொட்டிக்
கிடக்கின்றன

- அன்புடன் புகாரி

No comments: