தீவிர இறைப்பற்று

தீவிர இறைப் பற்று என்பது நல்ல விசயம்.

இறையின் மீது தீவிர பற்று இருந்தால்
அன்பின் மீதும்
அமைதியின் மீதும்
கருணையின் மீதும்
மன்னிப்பின் மீதும்
தீவிர பற்று இருக்க வேண்டும்.

ஏனெனில்
அவையாக இறைவன் இருப்பதாகத்தான்
அனைத்து வேதங்களும் சொல்கின்றன.

3 comments:

ரிஷி said...

ஆம் தோழமையே! முற்றிலும் உண்மை.

தருமி said...

//இறையின் மீது தீவிர பற்று இருந்தால்
அன்பின் மீதும்
அமைதியின் மீதும்
கருணையின் மீதும்
மன்னிப்பின் மீதும்
தீவிர பற்று இருக்க வேண்டும். //

இதைவிட ...

மனித நேயம் இருந்தால்
அன்பின் மீதும்
அமைதியின் மீதும்
கருணையின் மீதும்
மன்னிப்பின் மீதும்
தீவிர பற்று இருக்க வேண்டும்.

அன்புடன் புகாரி said...

அன்பின் தருமி அவர்களே,

அன்பின் மீதும்
அமைதியின் மீதும்
கருணையின் மீதும்
மன்னிப்பின் மீதும்
தீவிர பற்று இருக்க வேண்டும்

இதுதான் தேவை. அது இறைவன் வழியில் வந்தால் என்ன மனித நேயம் வழியில் வந்தால் என்ன?

அதோடு இறைவன் பற்று மனித நேயத்தைப் போற்றுவதுதானே?

ஆகவே எனக்கு ஏதும் வித்தியாசம் தெரியவில்லையே?

அன்புடன் புகாரி