திரையிசைக்
கவிஞர்களுக்கெல்லாம்
பாடல்வரிகளைச் சுரந்தன
அப்துல் ரகுமானின் கவிமுலைகள்

அம்மி கொத்தமாட்டேனென்று
அறுதியிட்டு
உறுதியாய்ச் சொன்னவரின்
ரத்தக் கவிதைகளைக்
கொத்திக்கொண்டுபோய்
திரைக் கல்லில் அரைத்து
மஞ்சள் பூசிக்கொண்டவர்களை

மந்தகாசத்தோடு மட்டுமே பார்த்த
கம்பீரத் தமிழன் கவிக்கோவிற்கு
புவிக்கோள் நிறைத்துப்
பொழியும் என் அஞ்சலிகள்

No comments: