தாழம்பூ நெஞ்சத்தின் தென்றல் அஞ்சல்


கடல்
அலைகளுக்கோ
கால்களில்லை
அவை
நடப்பதுவோ
ராஜநடை

உன்
விழிகளுக்கோ
இதழ்களில்லை
அவை
மொழிவதுவோ
தேன்கவிதை

உன்னைத்
தொடும்வரைத்
துயிலிலிருக்கும்
தென்றல்

உன்னைத்
தொட்டதும்
துள்ளித்துள்ளி
ஆடிவந்து

என்
காதுகளில்
கிசுகிசுக்கும்

ஏனெனில்
உன்
தாழம்பூ நெஞ்சம்
எப்பொழுதும்

எனக்குத்
தூதனுப்பத்தானே
துடித்துக்கொண்டிருக்கும்

1 comment:

cheena (சீனா) said...

நல்லதொரு கவிதை. கால்களில்லாமல் ராஜ நடை போடும் கடலலைகள், இதழ்களில்லாமாலெயே தேன் கவிதை எழுதும் காதலியின் விழிகள், தூது செல்லும் தென்றல், தூதனுப்பத் துடிக்கும் தாழம்பூ வாசம் - ஆகா ஆகா அருமையான கவிதை. நல் வாழ்த்துகள்.