***30 


இறைவன் படைத்தது இயல்புகளை
மனிதன் படைத்தது சிதைவுகளை

இயல்பாய் வாழென
அவன் அனுப்பிவைத்தான்

இவனோ
இஷ்டம்போலச் சட்டமிட்டான்

கோடுகள் கொடுத்ததுவா வாழ்க்கை
கோட்டுக்குள்
நாளும் கிழிகின்றன உயிர்கள்

எது சரி எது தவறு
எவருக்கும் தெரியவில்லை

தவறு சரியென்றும்
சரி தவறென்றும்
தோன்றுவதைத் தடுக்க
எவருக்கும் முடியவில்லை

வட்டம் சிறிதானால் அதனுள்
எப்படி ஓடினாலும்
முட்டத்தான் செய்யும்

வாழ்க்கை ஒருமுறைதான்
ஆனால்
அதனுள் மரண சோதனைகளோ
பலமுறை பலமுறை

வாழ்க்கை கிடைக்கிறது
ஆனால்
வாழ்வதுதான்
பலருக்கும் கிடைப்பதில்ல்லை

தேங்காய் மூடியை
நாய் உருட்டும்
நாட்களாகிப் போகின்றன

அறிவற்று உலவுவதும்
அழகான வாழ்க்கையாகலாம்

எதையும் நம்பி நம்பி வாழ்வதும்
நிரந்தர நிம்மதி தரலாம்

அங்கே
துன்பமென்று
ஏதுமில்லாமல் போகலாம்

துயருக்கும்
வழியில்லை என்றாகலாம்

1 comment:

சாந்தி said...

வட்டம் சிறிதானால் அதனுள்
எப்படி ஓடினாலும் முட்டத்தான் செய்யும்
வாழ்க்கை ஒருமுறைதான் ஆனால்
அதனுள் மரண சோதனைகளோ
பலமுறை பலமுறை

அருமையான வரிகள்..