18

உயிர் மரத்தின்
உணர்வுப் பட்டைகளை
கொத்திக் கொத்தி
உனக்கான இரையைக் கிளறி
எனக்குப் பெருமூச்சுகளை
அடுக்கடுக்காய்ப் பரிமாறி
விருந்து வைக்கும்
உன் அலகுகளில் வழிகிறது
என் வாழ்க்கை

காதலிக்கிறேன் உன்னை எப்போதும்

4 comments:

சாந்தி said...

எப்படித்தான் இப்படியெல்லாம் கற்பனை பண்ண முடியுதோ?..

பூங்குழலி said...

எனக்குப் பெருமூச்சுகளை
அடுக்கடுக்காய்ப் பரிமாறி
விருந்து வைக்கும்

அருமையாக இருக்கிறது

ஆயிஷா said...

எப்படித்தான் இப்படியெல்லாம் கற்பனை பண்ண முடியுதோ?..



அதானே............!
அன்புடன் ஆயிஷா

சீனா said...

உனக்கான இரையைக் கிளறி

பெருமூசுகளை அடுக்கடுக்காய் பரிமாறி

ரசித்த வரிகள்

நல்ல கவிதை

நன்று நன்று நல்வாழ்த்துகள் புகாரி