16

காலைக்கும் கனிவுக்கும் இடையில்
எச்சில் புரை ஏறியது
என் உயிரையே வெளியேற்றி

அதன் வள்ளுவ நாயகி
நீயாய் இருக்கமாட்டாயா என்ற பேராசையில்
செருமிச் செருமிச்
செருமிக்கொண்டே இருக்கிறேன்

புல்நுனி நீர்ப்பொட்டே
எத்தனைமுறை நினைத்திருப்பாய்
நீ என்னை
மறந்தாவது ஒருமுறை
என்னிடம் சொல்லக்கூடாதா

உன் ஆசை மின்னலைகள்
அலையும் வெளிப்பரப்பை
அறியாதவனா நான்
ஏனிப்படி நாடக இமைகளுக்குள்
சுடர்மணி ஒளித்து
உன்னையே வதைக்கிறாய்

வா...
வருவதுதான் வாழ்க்கை
வேறெதற்கும் வாழ்க்கை
என்ற பொருளில்லை

காதலிக்கிறேன் உன்னை எப்போதும்

4 comments:

பூங்குழலி said...

வேறெதற்கும் வாழ்க்கை
என்ற பொருளில்லை

நல்லா இருக்கு

புன்னகையரசன் said...

வா...
வருவதுதான் வாழ்க்கை
வேறெதற்கும் வாழ்க்கை
என்ற பொருளில்லை


எனக்கு பிடிச்சது ஆசான்...

ஆயிஷா said...

உன் ஆசை மின்னலைகள்
அலையும் வெளிப்பரப்பை
அறியாதவனா நான்
ஏனிப்படி நாடக இமைகளுக்குள்
சுடர்மணி ஒளித்து
உன்னையே வதைக்கிறாய்

ரசித்தேன் இந்த வரிகளை.
அன்புடன் ஆயிஷா

சக்தி said...

அன்பின் புதுக்கவிதைப் புயலே,

அருமையான கவிதைகள் தமிழின் வனப்பில் பாரிய ஒளிவீசுகின்றன

அன்புடன்
சக்தி