20

உன்
விழிவானப் பந்தலில்
மினுக்கும் நட்சத்திரங்களின்
கனவுக் கோலங்கள்தான் நீ

உன்
இதய மயிலின்
இயல்பான தோகை விரிப்புகளால்
சிலிர்க்கும் உணர்வுகள்தான் நீ

ஊருக்கும் உறவுக்கும்
உன் நிறம் கரைத்து வெளிர்வது
நாடகம்

வேர் மறைத்த அபிநயங்கள்
ஒருபோதும் வாழ்க்கையாவதில்லை
சுயத்தின் தலை நசுக்கித்தான்
அரிதாரக் கூத்துகளின் அரங்கேற்றம்

வாழும்போது மரணித்தால்
சாகுப்போதா வாழப்போகிறோம்

காதலிக்கிறேன் உன்னை எப்போதும்

3 comments:

சிவா said...

உன்
விழிவானப் பந்தலில்
மினுக்கும் நட்சத்திரங்களின்
கனவுக் கோலங்கள்தான் நீ

உன்
இதய மயிலின்
இயல்பான தோகை விரிப்புகளால்
சிலிர்க்கும் உணர்வுகள்தான் நீ

உண்மைதான் ஆனால்

ஊருக்கும் உறவுக்கும்
உன் நிறம் கரைத்து வெளிர்வது
நாடகம்

அது தானே ஆசான் தேவைப்படுகிறது.. :(

வேர் மறைத்த அபிநயங்கள்
ஒருபோதும் வாழ்க்கையாவதில்லை
சுயத்தின் தலை நசுக்கித்தான்
அரிதாரக் கூத்துகளின் அரங்கேற்றம்

ஆமாம்

வாழும்போது மரணித்தால்
சாகுப்போதா வாழப்போகிறோம்
சத்திய வார்த்தை

புன்னகையரசன் said...

பத்தி பத்தியாக விமர்சிக்க ஆசை.. நேரமின்மை என்ன செய்ய..

அருமை ஆசான்...

பூங்குழலி said...

வாழும்போது மரணித்தால்
சாகுப்போதா வாழப்போகிறோம்

அருமை