#தமிழ்முஸ்லிம்

அப்பா vs அத்தா / அத்தா என்பதே பழந்தமிழ்ச் சொல்

அத்தா என்பதே பழந்தமிழ்ச் சொல்

தமிழக முஸ்லிம் வீடுகளில் தந்தையை அப்பா என்று அழைக்க மாட்டார்கள். அத்தா என்று அழைப்பார்கள்.

அத்தன் என்பதுதான் அத்தா என்று அழைக்கப்படுகிறது.

அத்தன் என்றால் தகப்பன் என்று பொருள்.

பழைய இலக்கியங்களில் அத்தா என்ற சொல்லை நிறைய இடங்களில் காணலாம்.
 
அத்தா அச்சன் முத்தன் அப்பா என்பதெல்லாம் தகப்பன் என்பதனையே குறிக்கும்.

அத்தா என்பதுதான் பழந்தமிழ்ச் சொல். அப்பா என்பது தமிழுக்குள் சமீபத்தில் வந்த சொல்தான்.


*
பித்தா! பிறைசூடி! பெருமானே! அருளாளா!
எத்தால் மறவாதே நினைக்கின்றேன் மனத்து உன்னை
வைத்தாய் பெண்ணைத் தென்பால் வெண்ணெய்நல்லூர் அருட்டுறையுள்
அத்தா உனக்கு ஆளாய் இனி அல்லேன் எனலாமே. - தேவாரம்


*
அத்தா இது கேள் என ஆரியன் கூறுவான் - கம்பராமாயணம்.


*
அத்தா உனக்காளாய் இனி அல்லேன் எனலாமே - தேவாரம்


*
காமரு நோக்கினை அத்தத்தா என்னும்நின்
தேமொழி கேட்டல் இனிது - கலித்தொகை


*
'அன்னை நீ; அத்தன் நீயே;
அல்லவை எல்லாம் நீயே;
பின்னும் நீ; முன்னும் நீயே;
பேறும் நீ; இழவும் நீயே;
என்னை, "நீ இகழ்ந்தது" என்றது எங்ஙனே?
ஈசன் ஆய உன்னை நீ உணராய்!
நாயேன் எங்ஙனம் உணர்வேன், உன்னை?' 
- கம்பராமாயணம், யுத்தகாண்டம்


*
“முத்தன்ன வெண்ணகையாய் முன் வந்தெதிர் எழுந்தென்
‘அத்தன்’ ஆனந்தன் அமுதன் என்றள்ளூறித்
தித்திக்கப் பேசுவாய் வந்துன் கடை திறவாய்
பத்துடையீர் ஈசன் பழ அடியீர் பாங்குடையீர்
புத்தடியோம் புன்மைதீர்த்து ஆட்கொண்டால் பொல்லாதோ
எத்தோ நின் அன்புடைமை எல்லோம் அறியோமோ
சித்தம் அழகியார் பாடாரோ நம் சிவனை
இத்தனையும் வேண்டும் எமக்கேலோர் எம்பாவாய்.
-திருவெம்பாவை

No comments: