முக்கனிகட்குள்ளும்
முதற் கனியே


கொஞ்சு மஞ்சள்
உதட்டழகுத் தேனே

முள் முக்காட்டுக்குள்
முகம் புதைத்த மதுரமே

தமிழ் மண் வழங்கும்
தங்கச் சொத்தே

பலாவே பல நூறு நிலாவே
வா வா வா வா


காதலிக்கிறேன் உன்னை எப்போதும்

No comments: