இன்றெல்லாம்
உலக நிகழ் மேடைகளில்

கூட்டமாய் ஓநாய்களும்
நடுவில்
ஒற்றை ஆட்டுக்குட்டியும்
காட்சிகள்தாம்

வதைகளை ரசிப்பதும்
வதைகளை ஆக்குவதுமாய்
கேடுகெட்ட இவ்வுலகம்

தர்மம் மீட்க
அரசியலே தீர்வு

ஆனால்
அந்த அரசியலோ
அறத்தை 
அடியோடு எரித்துவிட்டு
ஊழல் கூண்டில் 
சிறகொடிந்து
படுத்துக் கிடக்கிறது

மக்கள்
மாறாது
மண்
மாறாது

மனிதம் என்னும்
இறைநிலை
முழுதாய் முடிந்துபோன
முற்றுப் புள்ளியில்
எது துளிர்க்கும்?



No comments: