கருணையே கொள்வோம்

இசை நிகழ்ச்சி, நடனம், சிறப்பு விருந்து போன்ற உல்லாச நிகழ்ச்சிகளை அப்படியே தொண்டு நிகழ்ச்சியாக மாற்றுவது மிகவும் பாராட்டுக்குரிய செயல்.

ஒரு டாலரை ஏழைக்குழந்தைகளுக்காக வழங்க விருப்பமா என்று கேட்பார்கள். கனடாவில் இதுபோல நிறைய நிகழும். இதையே ஊரிலும் கொண்டுவரவேண்டும்.

தியேட்டருக்குப் படம் பார்க்க வருபவர்களை ஒரு ரூபாய் அதிகம் தருகிறீர்களா என்று கேட்கவேண்டும். வால்மார்ட்டில் தயக்கமின்றி கேட்பார்கள். யாரையும் கட்டாயப்படுத்த மாட்டார்கள்

உலகைக் கருணையுடையதாய் மாற்றுவது நம் கையில்தான் இருக்கிறது.

பசி கொல்வோம்
ஏழ்மை கொல்வோம்
வன்முறை கொல்வோம்
கருணையே கொள்வோம்

1 comment:

கரந்தை ஜெயக்குமார் said...

உலகை கருணை உடையதாய் மாற்றுவோம்