சத்தியம் அசத்தியம்
இரண்டுக்கும் இடையில்
புதிதல்ல போராட்டம்

அறிவை துணிச்சலை
யாசித்தே சத்தியம்

தங்கமுலாப் பொய்களால்
சத்தியத்தின் சங்கறுத்தே
அசத்தியம்

ஆயிரத்து நானூற்று
முப்பத்தைந்து ஆண்டுகளும்
நழுவியே போனால்தான்
என்ன

சத்திய நூல்தானே
நிலைக்கும்

இதோ
அறிவும் துணிச்சலும்
ஐந்தாம் வயதினிலேயே
அதுதான்
புதிய தலைமுறை

சத்தியம் வந்தது
அசத்தியம் அழிந்தது
நிச்சயமாக
அசத்தியமானது
அழிந்து போவதேயாகும்
(குர்-ஆன் 17:81)

No comments: