15

இறைவன் இறைவன்
என்று கதறுகிறாய்

சொர்க்கம் சொர்க்கம்
என்று அலைகிறாய்

மரணத்திற்கு முன்
மகத்தான வாழ்க்கை இருக்கிறது
என்று தெரியுமா உனக்கு

சின்னஞ்சிறு
போலி வட்டத்துக்குள்
பொழுதுக்கும் அடைந்து

அதனுள்ளும்
மொட்டையாய் நின்று

உன் நாட்களையும்
உன்னோடு ஒட்டியவர்
நாட்களையும்

கற்பனைகளற்றதாய்க்
கட்டாந் தரையாய்
ரசனைகள் அற்றதாய்
ரத்தம் சுண்டியதாய்
ஆக்கிக்கொண்டால்

இறைவனை நீ
நம்ப மறுக்கிறாய்
என்று தெரியுமா உனக்கு

உன்னை நீயே
கொல்லத் துடிக்கிறாய்
புரியுமா உனக்கு

No comments: