சாதியா - பிழையில்லை இருந்துவிட்டுப் போகட்டும்
மதமா - பிழையில்லை இருந்துவிட்டுப் போகட்டும்
கடவுளா - பிழையில்லை இருந்துவிட்டுப் போகட்டும்

ஆனால் 
இந்த மூன்றையும் கொண்டு 
மனிதர்களிடம்

- ஏற்றத்தாழ்வுகள் வளர்ந்தால்
- வெறுப்புணர்வுகள் எகிறினால்
- வன்முறைகள் தூண்டப்பட்டால்

மனிதன் படைத்த இந்த மூன்றையும் 
மனிதனே முயன்று அழிக்கத்தான் வேண்டும்

மனிதன் படைக்காத
இறைவன் ஒருவன் இருக்கிறான்

அவனுக்கு நாம் இட்டுவைத்திருக்கும்
இந்தப் பெயர்கள் கிடையாது
இந்தப் பண்புகள் கிடையாது
இந்த இலக்கணங்கள் கிடையாது

வரையறுக்கப்பட முடியாத
எல்லைகளற்ற
சிந்திக்கவியலாத
ஒருவனெனக் கொண்டால்
இறை நம்பிக்கை
நிச்சயமாகப் பிழையே இல்லை

ஆறுதல்
நிம்மதி
நம்பிக்கை
என்றதில்
நன்மைகளே உண்டு

No comments: