32

சில
குரல்களைக் கேட்கும்போதே
செத்துப் போகிறோமே
ஏன்

அந்த குரல்
உண்மையில்
நம்மை
என்னதான் செய்கிறது

ஏன்
அந்தக் குரல்
நம்முடனேயே இல்லை

ஏன்
அந்தக் குரல்
நமக்கே நமக்காக
வேண்டும் வேண்டும்
என்று
நாம் அடம்பிடிப்பதும்
இல்லை

நம் நாகரிகம்
நம்
தேவைகளைக்
கொன்று புதைக்கிறதா

நம் பண்பாடு
நம் வேர்களை
நீரின்றித்
தவிக்கவிடுகிறதா

ஏன்

ஏன்

ஏன்

இறைவன் படைத்ததை
மனிதன் மறுக்கிறான்
என்று கொள்ளலாமா
இதை

தெரியவில்லையே

ஆனால்....

காதலிக்கிறேன் உன்னை எப்போதும்

 

No comments: