கனடா தொலைக்காட்சியின் தமிழ் மரபுத் திங்கள் பற்றி உரையாடிவிட்டு வெளியில் வந்தபோது ஓர் ஈழ நண்பர் கேட்டார்.
முஸ்லிம் பொங்கல் கொண்டாடுவார்கள் என்கிறீர்களே, பொங்கல் அன்று யாரைக் கும்பிடுவீர்கள்?

அவரின் ஐயத்தின் அடிப்படை எனக்குப் புரிந்தது.
...
பொங்கல் என்பது உணவு தரும் பஞ்சபூதங்களுக்கும் நன்றி சொல்லும் நன்றிநவிலல் நாள் Thanks Giving Day.

நன்றியைச் சொல்லிவிட்டு நீங்கள் சாமி கும்பிடச் செல்லுங்கள் பிழையில்லை ஆனால் சாமி கும்பிடத்தான் பொங்கல் என்று கொள்ளாதீர்கள் என்று சொன்னேன். குழப்பத்தோடு விடைபெற்றார்.

No comments: