முடிவிலா உப்பு மழையை
விழிகளில் பொழிந்து
அதனுள் தானே விழுந்து
துகள்துகளாய்க் கரையும் உயிர்களே
உங்களுக்கெல்லாம்
ஓர் நற்செய்தி

கவ்விய மையிருட்டின்
மயானக் கொடுமைகளில்
வெடித்துத் துடித்தாலும்
முழுதும் உதிர்ந்துவிடாமல்
இறுதிச் சொட்டு உயிரை
நடுங்கும் கரங்களில்
பத்திரப்படுத்திக் காத்திருக்கும்
கொடுந்துயர் இதயங்களுக்கு
உண்டு உண்டு
ஒரு பெரும் பிரகாச வெளிச்சம்

உனக்கே உனக்கான
அந்தச் சொர்க்கத்திற்காக
உன் கடைசி நரகத்திலும்
நம்பிக்கை புதையாமல்
பிரியும் உயிர்பற்றிப் பிடித்துக்
காத்திரு
அன்பு உயிரே

No comments: